ஞாயிறு, 23 டிசம்பர், 2012
."சத்தியம்" மௌன்ட்ரோட்ல தியட்ரா மாறிடிச்சு ...அங்கு" தர்மம்" பணமா கொட்டுது !
என் நண்பர் ஒருவர் சென்னை அசோக்நகரில் வீடு கட்ட முடிவு செய்தார் .அவர் இடத்தின் முன் ஒரு மரம் பல ஆண்டுகளாக வளர்ந்து நிற்கிறது .அம்மரத்தின் வேர்கள் அவர் இடம் முழுதும் பாய்ந்து இருக்கிறது .நண்பர் நேர்மையானவர் ,சட்டத்தை மதிப்பவர் . இந்த மரத்தை அப்புறப்படுத்த 132 வது வட்ட மாநகராட்சி உதவிப் பொறியாளருக்கு மனு எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டது . மரத்தை அகற்றுவதற்கான கட்டணமும் செலுத்த தயாராக இருக்கிறார் . இது வரை அவருக்கு பதிலே இல்லை . கவுன்சிலருக்கு கட்டிங் கொடுத்தால் முடிந்து விடும் என்று அவருக்கு அறிவுரை சொல்லியும், அவர் எல்லாம் சட்டப்படியாக தான் செய்வேன் என்று அடம்பிடிக்கிறார் . சத்யம் திரையரங்கம் வழியாக வந்தபோது இந்தக்காட்சியை பார்த்தேன் . பல ஆண்டுகாலமாக சாலையில் நிழல் தந்த மரம் சத்யம் திரையரங்கின் சுற்றுச்சுவரை பாதித்துவிடும் ,திரைஅரங்கம் முன் வைக்கப்படும் பட விளம்பரங்களை மறைத்துவிடும் என்ற காரணத்திற்க்காக வெட்டி வீழ்த்தப்பட்டது ! என் அப்பாவி அசோக்நகர் நண்பனை மனதுக்குள் நினைத்துக்கொண்டேன் ! மாநகராட்சி போடும் எந்த சட்டமும் பணக்காரனுக்கு அல்ல ...ஏழைக்குதான் ! பல ஆண்டுகள் முன்பு இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய ஜல்லிக்கட்டு படத்தின் வசனம் நினைவுக்கு வந்தது ...."சத்தியம்" மௌன்ட்ரோட்ல தியட்ரா மாறிடிச்சு ...அங்கு" தர்மம்" பணமா கொட்டுது ! என்று எழுதி இருப்பார் ! அம்மா ஆண்டாலும் அய்யா ஆண்டாலும் ஆட்சி மாறுமே தவிர காட்சி மாறாது !!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
