வெள்ளி, 4 ஜனவரி, 2013

இப்படியும் ஒரு தலைவர் ! (தணியாத தாகம் )

சென்னை ஐ .ஐ .டி .கணித மேதை, பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களை வைகோவிடம் அறிமுகப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு . தாயகத்தில் அவர்களை அறிமுகப்படுத்தியபோது அந்த ஆண்டு மகளிர் தினத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடுத்துவதாக கூறினார் .சொன்னபடியே செய்துக் காட்டினார் . பேராசிரியரை அழைத்து சென்ற தினத்தில் தாயகத்தில் ஒரு வினோத காட்சியை கண்டேன் . அன்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அங்கு வைகோ முன் அமர்ந்திருந்தனர் .ஒவ்வொரு தம்பியை அழைக்கும் வைகோ அவரிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார் .உதவிக்கேட்டு வரும் தம்பியின் கோப்பை சரி பார்த்தப்பின் அந்தத் தம்பியின் முன்னிலையிலே தொலைபேசி எண்ணை சுழற்றுகிறார் ...sir iam vaiko here .A humble request . one of my close candidate has applied job in your concern .pls consider his application .இப்படி அன்று மட்டும் பல படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தந்தார் ! இப்படி ஒருக் காட்சியை நான் என் வாழ்நாளில் எந்தக்கட்சி அலுவலகத்திலும் கண்டதில்லை ! எத்தனையோ நேர்காணல்களை அவரிடம் எடுத்துள்ளேன் . இந்த மனிதரின் வேகம் ,பேச்சு ,கட்டுப்பாடு ,துணிவு என்போன்ற இளைஞர்களை கவர்ந்ததில் ஆச்சர்யம் இல்லை . அவர் முதல் நடைபயணம் சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி சாலையில் நிறை உற்றபோது அவருடன் நடந்து செல்லும் அறிய வாய்ப்பினைப் பெற்றேன் .தொண்டர் அணியுடன் முன்னே நடந்து சென்றவர் பயணத்தை நிறைவு செய்யும் நேரத்தில் சட்டென திரும்பி பார்த்து, வேகமாக பின்னோக்கி நடந்த வந்தார் .நடைபயணத்தில் நடந்து வந்த தம்பி, தான் வைத்திருந்த கொடிக்கம்பில் லேசாக அங்கு நின்றிருந்த காவல்துறை வாகனத்தில் தட்டி விட்டார் .கோபமுற்ற வைகோ விரைந்து சென்று அந்தத் தம்பியின் கைகளில் இருந்த ம.தி .மு ,க .கொடியை பிடுங்கிக்கொண்டு ." தயவு செய்து நீ ஊருக்கு கிளம்பு .கட்டுப்பாடு இல்லாதவன் என் கட்சிக்கு வேண்டாம் " என்று சொல்லி அனுப்பி விட்டார் . அன்றைய நடைபயணம் தொடங்கி இன்றைய மதுவிலக்கு பயணம் வரை அவர் சாதித்த சாதனைகள் ஏராளம் .இருந்தும் வைகோ ஏன் முதல்வர் வேட்பாளராக வரவில்லை என்று நடுநிலையாளர்களுக்கு கவலை உண்டு . கூட்டணி அரசியலில் ஒவ்வொரு முறையும் பல்லக்கு ஏறும் தலைவர்கள் மத்தியில் இவர் பல்லக்கு தூக்கும் தலைவராக மாறிவிடுகிறார் . வைகோவுக்கு நான் வைக்கும் ஒரே வேண்டுகோள், தயவுசெய்து இனி மற்றக் கழகங்களுடன் கூட்டணி வைக்காதீர்கள் .மூன்றாவது அணிக்கு நீங்கள் தலைவராகுங்கள் ! ஓட்டு அரசியல் பற்றி கவலைப்படாதீர்கள் .கட்சியை நம்பி நீங்கள் இல்லை .உங்களை நம்பித்தான் கட்சி ! மாற்று தலைவராக உங்களை மக்கள் எப்போதோ தேர்ந்தெடுத்திருப்பார்கள் ....நீங்கள் தான் கட்சியைக்காப்பாற்ற கலைஞரிடமும் ஜெயலலிதாவிடமும் கூட்டணி அமைத்தீர்கள் . உங்களை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் .உங்களையே நம்பி இருக்கும் தொண்டர்கள் ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகிறார்கள் . மாற்று தலைவராக உங்களை மக்கள் ஏற்க தயார் ....மீண்டும் அவர்களுடன் கூட்டணி அமைத்து உங்கள் நம்பக தன்மையை இழந்துவிடாதீர்கள் . காலம் உங்களை அங்கீகரித்தே தீரும் . " என் பயணம் முட்கள் நிறைந்தது .துன்பம் அனுபவிப்பவரே என்னுடன் வரலாம் .சுகம் தேடுவோர் வர வேண்டாம் " ம .தி .மு .க .தொடங்கியப்போது நீங்கள் சொன்னது .சுகம் தேடியவர்கள் உங்களுடன் இல்லை .மற்றவர்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் ? இது வரை வைகோ உடன் எனக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டேன் . அடுத்தத் தலைவர் ......கலைஞர்!! -தணியாத தாகம் தொடரும் சென்னை ஐ .ஐ .டி .கணித மேதை, பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களை வைகோவிடம் அறிமுகப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு . தாயகத்தில் அவர்களை அறிமுகப்படுத்தியபோது அந்த ஆண்டு மகளிர் தினத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடுத்துவதாக கூறினார் .சொன்னபடியே செய்துக் காட்டினார் . பேராசிரியரை அழைத்து சென்ற தினத்தில் தாயகத்தில் ஒரு வினோத காட்சியை கண்டேன் . அன்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அங்கு வைகோ முன் அமர்ந்திருந்தனர் .ஒவ்வொரு தம்பியை அழைக்கும் வைகோ அவரிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார் .உதவிக்கேட்டு வரும் தம்பியின் கோப்பை சரி பார்த்தப்பின் அந்தத் தம்பியின் முன்னிலையிலே தொலைபேசி எண்ணை சுழற்றுகிறார் ...sir iam vaiko here .A humble request . one of my close candidate has applied job in your concern .pls consider his application .இப்படி அன்று மட்டும் பல படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தந்தார் ! இப்படி ஒருக் காட்சியை நான் என் வாழ்நாளில் எந்தக்கட்சி அலுவலகத்திலும் கண்டதில்லை ! எத்தனையோ நேர்காணல்களை அவரிடம் எடுத்துள்ளேன் . இந்த மனிதரின் வேகம் ,பேச்சு ,கட்டுப்பாடு ,துணிவு என்போன்ற இளைஞர்களை கவர்ந்ததில் ஆச்சர்யம் இல்லை . அவர் முதல் நடைபயணம் சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி சாலையில் நிறை உற்றபோது அவருடன் நடந்து செல்லும் அறிய வாய்ப்பினைப் பெற்றேன் .தொண்டர் அணியுடன் முன்னே நடந்து சென்றவர் பயணத்தை நிறைவு செய்யும் நேரத்தில் சட்டென திரும்பி பார்த்து, வேகமாக பின்னோக்கி நடந்த வந்தார் .நடைபயணத்தில் நடந்து வந்த தம்பி, தான் வைத்திருந்த கொடிக்கம்பில் லேசாக அங்கு நின்றிருந்த காவல்துறை வாகனத்தில் தட்டி விட்டார் .கோபமுற்ற வைகோ விரைந்து சென்று அந்தத் தம்பியின் கைகளில் இருந்த ம.தி .மு ,க .கொடியை பிடுங்கிக்கொண்டு ." தயவு செய்து நீ ஊருக்கு கிளம்பு .கட்டுப்பாடு இல்லாதவன் என் கட்சிக்கு வேண்டாம் " என்று சொல்லி அனுப்பி விட்டார் . அன்றைய நடைபயணம் தொடங்கி இன்றைய மதுவிலக்கு பயணம் வரை அவர் சாதித்த சாதனைகள் ஏராளம் .இருந்தும் வைகோ ஏன் முதல்வர் வேட்பாளராக வரவில்லை என்று நடுநிலையாளர்களுக்கு கவலை உண்டு . கூட்டணி அரசியலில் ஒவ்வொரு முறையும் பல்லக்கு ஏறும் தலைவர்கள் மத்தியில் இவர் பல்லக்கு தூக்கும் தலைவராக மாறிவிடுகிறார் . வைகோவுக்கு நான் வைக்கும் ஒரே வேண்டுகோள், தயவுசெய்து இனி மற்றக் கழகங்களுடன் கூட்டணி வைக்காதீர்கள் .மூன்றாவது அணிக்கு நீங்கள் தலைவராகுங்கள் ! ஓட்டு அரசியல் பற்றி கவலைப்படாதீர்கள் .கட்சியை நம்பி நீங்கள் இல்லை .உங்களை நம்பித்தான் கட்சி ! மாற்று தலைவராக உங்களை மக்கள் எப்போதோ தேர்ந்தெடுத்திருப்பார்கள் ....நீங்கள் தான் கட்சியைக்காப்பாற்ற கலைஞரிடமும் ஜெயலலிதாவிடமும் கூட்டணி அமைத்தீர்கள் . உங்களை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் .உங்களையே நம்பி இருக்கும் தொண்டர்கள் ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகிறார்கள் . மாற்று தலைவராக உங்களை மக்கள் ஏற்க தயார் ....மீண்டும் அவர்களுடன் கூட்டணி அமைத்து உங்கள் நம்பக தன்மையை இழந்துவிடாதீர்கள் . காலம் உங்களை அங்கீகரித்தே தீரும் . " என் பயணம் முட்கள் நிறைந்தது .துன்பம் அனுபவிப்பவரே என்னுடன் வரலாம் .சுகம் தேடுவோர் வர வேண்டாம் " ம .தி .மு .க .தொடங்கியப்போது நீங்கள் சொன்னது .சுகம் தேடியவர்கள் உங்களுடன் இல்லை .மற்றவர்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் ? இது வரை வைகோ உடன் எனக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டேன் . அடுத்தத் தலைவர் ......கலைஞர்!! -தணியாத தாகம் தொடரும்

விடுதலைப்புலிகள் நடத்தும் பத்திரிகையின் ஆண்டு விழா ! தாகத்துக்கு பெருமை சேர்த்த தினமலர் !!!!(தணியாத தாகம் )

புஷ்பவனம் கச்சேரிக்கு மறுதினம் நான் மியூசிக் அகாடமி உள்ளே நுழைந்தேன் . வரவேற்ப்பு பலமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன் ! எது நடந்தாலும் கட்டிய வைப்புத்தொகையை வாங்கியாக வேண்டுமே .பலமணிநேர காத்திருப்புக்குப் பின் உள்ளே நுழைந்தேன் . ஒரு புழுவை பார்பதுபோல் "அவாள்கள்" என்னைப் பார்த்தார்கள் ! " எல்லாத்தையும் குழி தோண்டிப் பொதச்சுட்டு எதுக்கு வந்த " என்றார் நிர்வாகி என்னைப்பார்த்து ." சார் caution deposit refund வாங்க வந்தேன் " பவ்யமாக பதில் அளித்தேன் .அந்தப் பணம் வந்தால் தான் அடுத்த தாகம் வரும் !" ஒரு வாரம் கழித்து வா .கணக்குப் பார்க்கணும் " என்றார் நிர்வாகி . அவர் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் " ஓய் பன்றதெல்லாம் பண்ணிட்டு அப்பாவி மாறி நிக்கற .மேடை புனிதத்தையே கெடுத்துட்டுயே . எதுக்கு இவனுக்கு எல்லாம் இடம் கொடுத்தீங்க " என்று கத்த அரமித்தார் ."போன வருஷம் (1993) இதே அரங்கத்தில் கங்கை அமரன் கச்சேரி நடத்தினோம் .நடிகை ரஞ்சிதா மேடை ஏறினார் .அப்போ உங்க மேடை புனிதம் கெடலியா " என்றேன் அமைதியாக (எகிறினா deposit போய்டுமே !). " பழைய கதையெல்லாம் பேசாதே . புஷ்பவனம் வந்தது தப்பில்லை .அவர் மேடையில் தமிழிசை பாடியது தான் தப்பு .இது கர்னாடக சபை .இங்கே தமிழ்ல பாடக்கூடாது " என்றார் காட்டமாக ! ( நீ என்ன கத்தினாலும் பாடியது பாடியதுதான் -மனசுக்குள் நினைத்துக்கொண்டேன் ) ."இவன் கிட்ட என்ன பேச்சு .நீ அடுத்த வாரம் வா " என்றார் நிர்வாகி திமிருடன் .பலமாதம் கழித்து பாதித் தொகையை தந்தார்கள் . புஷ்பவனத்தை அங்கு பாடவைத்து நமக்கு கிடைத்த வெற்றியை நினைத்து மனதை தேற்றிக்கொண்டேன் . வைகோவை தவறவிட்டு விட்டோமே என்று மனம் தவித்துக்கொண்டே இருந்தது . ஆசிரியர் குழு நண்பர்கள் பிரேம்ராஜ் ,பிரகதீஸ்வரன் மற்றும் வெங்கடேஷ்," நாம் வைகோவை அடுத்த நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டும் "என்று சொன்னார்கள் . 1996 பிப்ரவரி 4 .சென்னை ஜெர்மன் அரங்கில் தாகம் இதழின் 5 ஆம் ஆண்டு விழா . வைகோ ,சுபவீ ,நந்தன் அருணாசலம் ,இயக்குனர் மணிவண்ணன் அமர்ந்திருக்க அரங்கம் நிரம்பி வழிந்தது . முதலில் தேனிசை செல்லப்பாவின் நிகழ்ச்சி .அடுத்து புஷ்பவனம் .அதன் பிறகு சிறப்பு விருந்தினர்கள் பேச்சு . முன் வரிசையில் கவிஞர் காசிஆனந்தன் அமர்ந்திருக்க ,அவர் எழுதிய " அழகான அந்தப் பனை மரம் ,அடிக்கடி நினைவில் வரும் .தமிழ் ஈழ மன்னே உன்னை ...மறப்பேனா நீ என் அன்னை " பாடலை தேனிசைப் பாட, வைகோ கண் கலங்கினார் . இசை நிகழ்ச்சி முடிந்துடன் மேடை ஏறிய வைகோ, "இன்று என்ன நாள் தெரியுமா ? இன்றுதான் எழுதும் தாள் (பேப்பர் ) கண்டுபிடிக்கப்பட்ட தினம் .சரியாகத்தான் தாகம் ஆண்டு விழா வைத்துள்ளீர்கள் ! என்று பேசினார் . விழா இனிதே நிறை உற்றது .குற்றாலீஸ்வரன் நிகழ்ச்சியில் கோட்டைவிட்டது இன்று நிறைவேறியது என்று வைகோவிடம் நான் சொல்ல ,அவரும் அதை அமோதித்தார் . ஆனால் ,அன்று இரவு வைகோவுக்கு மிகப்பெரிய சோகம் ! அவரின் தம்பிமார்களில் ஒருவரான ராயபுரம் சிவா படுகொலை செய்யப்பட்டார் ! ஏற்கனவே ஏழுமலை நாயக்கர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சிவா கொல்லப்பட்டது வைகோவையும் தொண்டர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது . மறுநாள் காலை அதுதான் தலைப்பு செய்தி ! விழாவுக்கு உறுதியாக வருவேன் என்று இரண்டு நாட்களுக்கு முன் என்னிடமும் தோழர் ஒ .சுந்தரத்திடமும் சொன்ன சிவா, ரத்த வெள்ளத்தில் மிதக்கும் படத்தைப்பார்த்து நானும் அதிர்ச்சி உற்றேன் . சிவா படுகொலை செய்தி முதல் பக்கத்தில் ....அடுத்தப்பக்கத்தில் தாகம் இதழின் 5 ஆம் ஆண்டு விழா செய்தியை பல பத்திரிகைகள் படத்துடன் வெளியிட்டது .ஆனால், ஒரு பத்திரிகை மட்டும் " சென்னையில் விடுதலைப்புலிகள் நடத்தும் பத்திரிகையின் ஆண்டு விழா ! வைகோ பங்கேற்ப்பு !" என்று செய்தி வெளியிட்டது ! அது பொய் செய்தி என்றாலும் தாகத்துக்கு எப்பேர்பட்ட பெருமையை அந்த ப்பத்திரிகை சேர்த்துள்ளது என்று எனக்குள் நான் மகிழ்ந்தேன் ! அந்தப் புலானாய்வு பத்திரிகைவேறு யாரும் இல்லை .....தமிழர்களின் வீழ்ச்சியில் மகிழும் ,வெற்றியில் அவதூறு பரப்பும் ....உண்மை பேசும் நாளிதழ் .....தினமலர் ...!!!!(தணியாத தாகம் தொடரை படித்த வைகோ ,இன்று மும்பையில் இருந்து தொலைபேசி மூலம் தன் மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்துகொண்டார் .உடன் மல்லை சத்யாவும் இருந்தார் . சங்கொலியிலும் வெளியிடுவதாக கூறினார் ) ----தணியாத தாகம் தொடரும் ...