சனி, 7 ஜூன், 2014

எத்தனை
தூரம்
ஓடுவாய்
கடலே
ஓடு....


உன்னில்
இரண்டறக்
கலந்து
விட்ட



இந்த
வானத்தின்
நிறத்தைக்
கழுவு
பார்க்கலாம் ?

( மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...தொகுப்பிலிருந்து )
சொல்
எரித்துப்
போனாள்....

செல்
அரித்துப்
போனது....

முகநூல் !
பத்தாண்டு
கழித்துப்
படித்தாலும்


எழுதியபோது
தந்த அதே
இன்பத்தைத்


தந்தால்
அது
கவிதை...


துன்பத்தைத்
தந்தால்
காதல் !
நான்
சொல்லாத
வார்த்தையை
சொன்னாதாகச்
மீண்டும்
மீண்டும்
சொல்கிறாய். ...


என்ன
கெட்டுவிட்டது
மறுபடியும்
சண்டையை
முதலில்
இருந்து
தொடங்குவோம் !


( நன்றி-பரோட்டா சூரி)
செல்போன்
கொடுத்தது
தப்பில்ல...

அதல
நெட்டு
போட்டு

கொடுத்தப்
பாரு
அதான்

நீ
செஞ்ச
தப்பு...

வீடு
தோறும்
ஒலிக்கும்

புதிய
சுப்ரபாதப்
பாடல் !
இங்கு...

கட்சித்
தொண்டர்கள்
குழப்பமாக
இருக்கிறார்கள்

மக்கள்
மிகத்
தெளிவாக
உள்ளனர் !

தோல்விக்கு
கிடைத்த
கடைசி
விடை !!
தேர்தலில்
மக்களை
கை
எடுத்து
கும்பிடும்
தலைவர்...


வென்றவுடன்
வாக்களிக்காத
கடவுளின்
கால்
தொட்டு
வணங்குகிறார் !



படம்-சந்திரன் வீராசாமி
உலகக்
கோப்பையில்
உதை
வாங்கும்
கால்பந்தை
விட...


உலகெங்கும்
என்
தமிழன்
வாங்கும்
அடி
அதிகம் !
ரத்தம்
முழுவதும்
உண்மையும்
உறுதியும்
அதிகம்...


சர்க்கரையும்
உப்பும்
சரியான
அளவில்
உள்ளது. ..


பேரறிவாளனின்
உடல்
பரிசோதனை
முடிவு
கசிவு !
படைப்பாற்றல்
மிகுந்த
தமிழர்களிடம் ...


சிக்கி
சின்னாபின்னமாகிறது
முகநூல் !

நாளைக்கும்
வானம்
நிச்சயம்
இருக்கும்..


நாம்
சேர்ந்து
பார்க்கத்தான்
வாய்ப்பில்லை !
முகநூலையே
நினைத்துக்
கொண்டு

முகத்திற்கு
எண்ணெய்
தடவுகிறோம்

தலைக்கு
முகச்சவரம்
செய்கிறோம்

அன்புத்
தம்பி
மார்க்கு

வேறு தொழிலே
கிடைக்கவில்லையா
உனக்கு ?
கடவுள்
வருவார்
நம்பும்
ஆத்தீகர்
போல்...

நானும்
நம்புகிறேன்
நீ
வருவாய்
என !
புதிய
ஆட்சி
பொறுப்பேற்றப்
பிறகும்

முடிவுகளை
நம்ப
மறுக்கும்
தலைவர் போல்

உன் திருமணப்
பத்திரிகை
வந்தப்
பிறகும்

நம்புகிறேன்
மீண்டும்
வருவாய
என்று !
ஏன்
இத்தனை
வேகம்?

நியாயமான
கேள்வி
தான்.

ஆனாலும்
யோசித்துப்
பார்

மென்தொடல்(டச் ஸ்கிரீன் )
கைபேசி
தானே

நம்
காதலின்
அஸ்திவாரம் !
உறவுகள்
மேம்படத்
தேவை...

அதிக
நெருக்கம்
அல்ல

அதிகமில்லா
அவசிய
இடைவெளி !
காலை வாரக்
காத்திருப்போர்
அதிகம்.

தலைவரின்
அவசர
வேண்டுகோள்...

யாரும்
காலில்
விழவேண்டாம் !
ஈர்ப்புக்கு
பெயர்தான்
காதல்...

இருந்து
விட்டுப்
போகட்டும்.

வெறும்
காமம்
என்று...

சொல்ல
நல்லாவா
இருக்கும் !
செத்துப்போன
பின்
இத்தனை
நாள்
கழித்தா
பிரேதப் பரிசோதனை
செய்வார்கள் ?


அடப்பாவிகளா
கடைசியில்
அனாதை
பிணமாகவே
ஆக்கிவிட்டீர்களா
உங்கள்
கட்சியை !

( செய்தி-காங்கிரஸ் தோல்வி குறித்து தற்போது ஆய்வு நடைபெறுகிறது)
இமயம்
முதல்
குமரி வரை
ஒட்டுமொத்த
நாட்டையே
ஓ வென
அழவைத்தாள்
ஒற்றை
நிர்பையா...

மரக்கிளையில்
தொங்கிய
என்
இரட்டை
சகோதரிகளுக்கு
அழக்கூட
ஆளில்லை
என்ன
பைய்யா ?


மோடிகள்
பொறுப்பேற்றாலும்


ஜாதிகள்
விடைபெறுவதில்லை !
இந்திய வல்லரசின்
மானம் காற்றில்
பறக்கிறது

இந்து மதத்தின்
பெருமை கயிற்றில்
தொங்குகிறது

ஐந்து கணவர்
பாஞ்சாலியை காக்க
கண்ணன்

நாதி இல்லா
சாதிக்கு இல்லை
கொம்பன்

நீதி மன்றங்களே
மரண தண்டனைக்கு
அஞ்சுகிறது

மனு நீதி
மரத்திலேயே தீர்ப்பு
எழுதுகிறது

கை பட்டால்
கால் பட்டால்
தீட்டு

படுக்கைக்கு மட்டுமில்லை
உயர் சாதிப்
பூட்டு

கங்கையும் யமுனையும்
கயிற்றில் தொங்கும்
காட்சி

பெரும்பான்மை அரசில்
சிறுபான்மை அழியும்
சாட்சி !
ஐவர்
மனைவி
பாஞ்சாலியை
காத்தது
யாதவ
கண்ணன்


இளம்
சகோதரிகளை
சூறையாடியது
ஐந்து
யாதவ
கள்வர்

வன்புணர்வு
முடிந்தவுடன்
ஐந்து
ஆண் குறிகளும்
கங்கையில்
மிதந்ததா ?

தீட்டு
பட்டுவிட்டால்
தீர்த்தம்
மட்டும்
தெளிப்பது
மடமை !