சனி, 7 ஜூன், 2014
இந்திய வல்லரசின்
மானம் காற்றில்
பறக்கிறது
இந்து மதத்தின்
பெருமை கயிற்றில்
தொங்குகிறது
ஐந்து கணவர்
பாஞ்சாலியை காக்க
கண்ணன்
நாதி இல்லா
சாதிக்கு இல்லை
கொம்பன்
நீதி மன்றங்களே
மரண தண்டனைக்கு
அஞ்சுகிறது
மனு நீதி
மரத்திலேயே தீர்ப்பு
எழுதுகிறது
கை பட்டால்
கால் பட்டால்
தீட்டு
படுக்கைக்கு மட்டுமில்லை
உயர் சாதிப்
பூட்டு
கங்கையும் யமுனையும்
கயிற்றில் தொங்கும்
காட்சி
பெரும்பான்மை அரசில்
சிறுபான்மை அழியும்
சாட்சி !
மானம் காற்றில்
பறக்கிறது
இந்து மதத்தின்
பெருமை கயிற்றில்
தொங்குகிறது
ஐந்து கணவர்
பாஞ்சாலியை காக்க
கண்ணன்
நாதி இல்லா
சாதிக்கு இல்லை
கொம்பன்
நீதி மன்றங்களே
மரண தண்டனைக்கு
அஞ்சுகிறது
மனு நீதி
மரத்திலேயே தீர்ப்பு
எழுதுகிறது
கை பட்டால்
கால் பட்டால்
தீட்டு
படுக்கைக்கு மட்டுமில்லை
உயர் சாதிப்
பூட்டு
கங்கையும் யமுனையும்
கயிற்றில் தொங்கும்
காட்சி
பெரும்பான்மை அரசில்
சிறுபான்மை அழியும்
சாட்சி !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















