திங்கள், 2 ஜூன், 2014

இச்சையூட்டும்
பச்சை
பசேல்
சேலைக்காரி....

மிருகங்களை
மனிதர்களாக
தக்கவைக்கும்
சோலைக்காரி !

படம்-பொன்மணி
கடைசிவரை
இருவரும்
பேசிக்கொள்ளவே
இல்லை

கவிதைகள்
எழுதி
காதல்
செய்யும்

முக
நூல்
பொய்
முகங்கள் !
பிழைப்புக்காக
பெண்
வேடம்
போடும்
மூன்றாம்
பாலினத்தை
கிண்டல்
செய்கிறது.....

தம்
முகத்தை
மறைத்து
முகநூலில்
காதல்
செய்யும்
நான்காம்
பாலினம் !
அண்ணா
மேம்பாலம்
முழுதும்
துளைகள்....

தம்பி
தங்கையின்
பிறந்தநாள்
கொடிகள் !
மண்ணைத்
தொட
என்னை
அனுமதிக்க
மறுப்பவர்கள்.....

விழுதுகள்
போல்
தழைக்க
வாழ்த்துவது
விந்தை !
கூட்டுக்குடும்பங்கள்
வரலாற்று
பாடத்தின்
அத்தியாயம்
ஆன பிறகு....


விழுதுகள்
காட்சிப்
பொருளாய்
ஆனதில்
ஆச்சரியம் இல்லை !
நான்
ஆடிய
ஊஞ்சல்
இது.....

அடுக்குமாடி
குடியிருப்பில்
அடைந்து
கிடக்கும்.....

என்
மகனுக்கு
ஆலம் விழுது
அறிமுகம் !
முகம்
தெரியா
நட்பிற்கு

ஆசையாய்
செய்யும்
உதவி

நன்றி
கூட
எதிர்பார்க்காது .

அலட்சியம்...
அதிகப்படியான
தண்டனை !

விருந்து
உண்ண
வரும்போது
விடுதலை

திரும்பிய
உடன்
சிறைப்
பிடிப்பு

மீனவர்கள்
உனக்கு
மீல்ஸ்
டோக்கனா ?
மானைக்
கண்டு
மயங்கியவளின்
கணவனை

கடவுளாக
ஏற்றுக்
கொண்டவர்
தான்

மீனைப்
பிடிக்க
வந்தவனை
அடிக்கும்

அயோக்கியன்
செயலைக்
கண்டிக்க
மறுக்கிறார்.

விருந்து
உண்டவன்
நன்றி
நவில்கிறான்

தமிழ்
மீனவர்களை
சிறைப்
பிடித்து.

அயோத்தி
ராமனை
காக்கும்
மோடி

அசோகவனத்தில்
சீதையாய்
தவிக்கும்
மீனவனை

காக்க
எந்த
அனுமனை
அனுப்பப்போகிறார் ?

சீதையை
சிறிதேனும்
சிதைக்காமல்
பாதுகாக்க

அவன்
ராவணன்
அல்ல...
ராஜபக்சே !
பெரும்
வெற்றிகள்
படு
தோல்விகள்

இந்தச்
சூரியனைச்
சுற்றி
சுற்றி

சுழன்று
வருகிறது
அரசியல்
உலகம்

வாழ்த்த
வயது
தேவை
இல்லை

தோல்வியில்
துணை நிற்கும்
துணிவு
போதும் !
தொட்டதற்கு
எல்லாம்
சந்தேகப்படும்
ராமனை விட

தொடாமல்
இருந்த
ராவணனே
மேல்

சிதையில்
இறங்கும்
முன்
சீதை !
கச்சையைப்
போல்
அவிழ்த்துப்
போடப்பட்டது
கச்சத் தீவு......

விளைவு
அன்றாடம்
தமிழ்
மீனவன்
சாவு !
தவறான
தொடலுக்கு
தவறான
அர்த்தம்
கற்பிப்பதால்.....

நவீன
கைப்பேசி
நிச்சயம்
பெண்பால்
தான் !