வெள்ளி, 30 மே, 2014

சிறை...

விடுமுறை
விடைபெறப்போவதை
நினைத்தால்....

மனம்
கனக்கிறது
பெற்றோர்களுக்கு....

பள்ளிச்சிறைக்கு
அனுப்பவேண்டுமே
குழந்தைகளை !

அழகு தேவதைகள் !

காலம்காலமாக
வார்த்தைகளால் தான்
வீசுவார்கள்
ஆண்கள்
திராவகத்தை....
இப்போதெல்லாம்
எங்கள்
முகத்திலேயே
நேரடியாக
வீசி விடுகிறார்கள்....
கருவிலேயே
ஆண் குழந்தைகளைக்
கொல்ல
எங்களுக்கு
மனமில்லை !

கார் காதல்...

கூடிவாழ
அன்பிருந்தும்
கூவி அழைக்கும்
பண்பிருந்தும்
கவிஞர் கூட்டம்
மறந்ததேனோ ?
கருமை நிறம்
என்பதாலோ.
உன் நிறத்தினை
பார்க்கும் மனிதன்
நிஜத்தினைப்
பார்காததேனோ ?
ஆடலென்றால்
மயிலென்பான்
பாடலென்றால்
குயிலென்பான்
அழகென்றால்
கிளியென்பான்
அன்பென்றால்
புறாவென்பான்
வானம்பாடி
பாடினால்
இன்பத்துடன்
உறவு கொள்வான்
நீ கானம் பாடி
ஆடினால்
விருந்தினர்
வருகையென
உனை
எள்ளுவான் !