செவ்வாய், 10 ஜூன், 2014

வன்முறை

குழந்தைகளுக்கு
சோறூட்டும்
போதே
சேர்த்தே
ஊட்டுகிறோம்
பவர்ரேஞ்சர்
ஸ்மேக்டவுன்
விஷங்களை...
பின்னெப்படி
அவன்
சோறு
போடுவான்
பெற்றோர்களுக்கு
என்று
எதிர்
பார்கிறோம் !
அசையாமல
அப்படியே
இருங்கள்...

அவளை
பிடித்து
வருகிறேன் !
கிளிகளை
விடுதலை
செய்தேன்...

இனி
உனக்கான
பூத்தொட்டி !
என்னைப்
பார்த்து
சிரிக்கும்
போது
உன்
அப்பனும்
முறைக்கிறார்...


டாஸ்மாக்கை
திறந்து
விட்டு
வாசலில்
மடக்கும்
காவலர்
போல் !
முடிவுகளை
நாம்
முடிவு
செய்யாதவரை..

அவை
நம்மை
மொத்தமாக
முடித்துவிடுகிறது !
நேற்று அறிவுமதி அண்ணன். இன்று சுபவீ அண்ணன். அண்ணனுடன் நெருங்கிய பழக்கம் உண்டு .ஆனால் கிண்டல் எல்லாம் செய்தது இல்லை. ஒரு பேராசிரியருக்கும் மாணவனுக்குமான உறவு.இதில் பதிவு செய்ய முடியாத உதவி கூட அண்ணன் எனக்கு செய்திருக்கிறார்.தமிழ்ச்சான்றோர் பேரவை, தந்தைப் பெரியார் தமிழிசை மன்றம், நந்தன் இதழ் இந்த மூன்று களத்திலும் அண்ணனுடன் பணியாற்றியக் காலம் பொற்காலம்.பெரியார், பிரபாகரன், பகுத்தறிவு, தமிழ் உணர்வு ...இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் இவரிடம் கற்றப்பாடங்களை.

பல நேரங்களில் அண்ணணின் இருசக்கர வாகனத்தின் ஓட்டுனராக நான் பணியாற்றியதை இன்றளவிலும் பெருமையாக கருதுகிறேன்.அவருடைய பிள்ளைகள் லெனின், பாரதி, இந்திரா ஆகியோருடன் அவர் நட்புடன் பழகும் விதம் பார்பதற்கே கண்கோடி வேண்டும். வாங்க , போங்க என்றுதான் அவர்களுடன் பேசுவார்.அதில் இருவர் காதல் திருமணம். அந்தக் காதலை மகிழ்ச்சியுடன் ஏற்று அவர்களுக்கு மணமுடித்து வைத்த மிகச்சிறந்த தந்தை அவர்.
அவர் தம்பிகள் நாங்கள் காதலித்தால் கூட தய்ககமின்றி அது உண்மையான காதலாக இருப்பின் வந்துப் பெண்கேட்கக்கூடத் தயங்க மாட்டார்.ஒருவேளை அது நிறைவேறாதப் பட்சத்தில் நாம் துவண்டு விடக்கூடாது என்று காதல் குறித்து வகுப்பெடுப்பார்.
நந்தனில் கொடுக்கும் சம்பளத்தை நான் ஒரே நாளில் செலவு செய்து விடுவேன்.எனக்கு அதை நாள் சம்பளமாக மாற்றிவிட்டார் !

ஒருமுறை புலிகளை ஆதரித்து அண்ணன் பேச ..அவரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து விட்டார்கள் .காவல் துறை வந்து அண்ணன் வீட்டில் விசாரித்தது.அக்கா வசந்தாவிடம் அதிகாரி கேட்டார்...உங்கள் கணவர் எல்.டி.டி.யா ? அதற்கு அக்கா சொன்ன பதில்...இல்லை இல்லை. ..நாங்கள் நாட்டுக்கோட்டைப் பக்கம் ...என்று....! சிரிப்பை அடக்கிக்கொண்டு கிளம்பினார் அதிகார்.அப்படி ஒரு அப்பாவி வசந்தா அக்கா...
தணியாத தாகம் தொடரும்...
இனி
எப்படி
அழுவாய்
கட்டிலே...


உனக்கு
கால்
வலிக்கிறது
என்று ?

அவமானத்தால்
அழுதது...
தலைவரின்
பிறந்தநாள்
விளம்பரத்தை
தாங்கி
நிற்கும்
நூற்றாண்டு
மரம் !
தன்
பிறந்தநாளன்று
முதியோர்
இல்லத்திற்கு
வந்த
நடிகனுக்குத்
தெரியவில்லை....


அவன்
முதல்
படத்தின்
தயாரிப்பாளர்
அங்குதான்
வாழ்கிறார்
என்று !
தன்
நினைவு
தினத்தை
அனைவரும்
நினைத்துப்
பார்க்க
வேண்டும்
என்று
எண்ணும்
எவனும்
பிறந்தநாள்
கொண்டாடுவதில்லை !
காலையில்
தலைவருக்குப்
போர்த்தப்படும்
அனைத்துப்
பொன்னாடைகளும்...


மாலையில்
வாங்கியக்
கடைக்கே
பத்திரமாக
திரும்பிவிடுகின்றன !
ஆற்றுமணல்
திருடனை
எதிர்க்க
யாருக்கும்
துணிவில்லை...


அன்றாடம்
தண்ணீர்
ஊற்றுகிறோம்
எறும்புப்
புத்தில் !
தொழிலதிபர்கள்
ஓயாமல்
உழைக்கிறார்கள்...


முன்னணி
நடிகைகளை
மணக்க !
கடைசியில்
தன்
ஓட்டுனரையே
மணந்துகொண்டாள்
நடிகை..



எல்லாம்
தெரிந்த
ஏகாம்பரம்
அவர்
ஒருவர்தான் !
தொலைபேசியில்
என்னிடம்
பேசவே
உனக்கு
நேரமில்லாதபோது...


உயிரை
கொடுப்பேன்
என்று
வாக்குறுதி
வேறு !
தேய்பிறை
ஆனது
விரல்
மை...


வளர்பிறை
ஆகுமா
வாக்காளன்
வாழ்வு ?
சத்தமில்லாத
சண்டைகள்

விரலைப்
பிளக்கின்றன...

விஞ்ஞான
உபயம்

முகநூல்
தபால்காரன் !
(மெசஞ்சர்)
தலைவரைப்
போலவே
தன்
முடியை
வாரினான்
ரசிகன்..


அவர்
'விக்'கை
படபிடிப்பில்
வாரிக்
கொண்டிருந்தான்
மேக்கப்மேன் !
தகவல்
தொழில்நுட்ப
மையங்களின்
கால்வாயில்...


லட்சக்கணக்கில்
மிதக்கின்றன
ஆணுறைக்
குழந்தைகள் !
ரதயாத்திரை
தலைவரை
கடைசியில்
வனவாசம்
அனுப்பிவிட்டான்...

ராமன் !
தன்
முதல்
காதலன்
திருமணப்
பரிசாக
புது வீட்டையே
தந்தாள்
நடிகை....

சற்று
கண்
அசந்திருந்தால்
அவனோடு
குடிசையில்தானே
குப்பைக்
கொட்டி
இருக்கவேண்டும் !
அந்த
நைஜீரிய
கருப்பு
திராட்சைகளையே
நம்பலாம்....


தங்கள்
உண்மையான
படங்களுடன்
கோரிகை
வைக்கிறார்கள் !
உதட்டுச்
சாயத்தை
அளவாகப்
பூசு...


உன்
வார்தைகளும்
நிறம்
மாறுகின்றன !
கொலை
செய்தவன்
நிரந்தரப்
பிணையில்....


மீன்
பிடித்தவன்
இலங்கைச்
சிறையில் !
தமிழீழ
கடல்
புலிகளின்
இல்லாமை....


தமிழக
மீனவர்
வாழ்வில்
ஒவ்வாமை !
நூறாண்டு
மரம்
இன்னும்
தந்துக்கொண்டே
இருக்கிறது
மல்கோவாவை.....


மரத்தின்
சருகுகளுக்கு
இணை
ஆகுமா
மனித
வாழ்க்கை ?

என்னுள்
தானே
புதைவாய்...


எத்தனை
நாள்
பார்கிறேன்?


கேள்வி
கேட்கும்
கிராமம் !
தாவணிகளை
பார்க்கும்
போதெல்லாம்...

அத்தை
மகள்
வருகிறாள் !

இசைக்கும்
இரவுக்கும்...


ஊடலே
வந்ததில்லை !


படம்-பொன்நிலா குமார்
மச்சி
இங்க
அருமை

அங்க
நீங்க
எருமை....

இத்தனை
நேரம்
பேசியில்

பீற்றிக்
கொண்டான்
நண்பன்....

அமெரிக்காவை
பற்றி
சிலாகித்தான்

அவனே
மீண்டும்
சொன்னான்...

மூத்தப்
பொண்ணு
பெரியவளானவுடன்

இந்தியா
வந்துடுவேன்
மச்சி ...!
கங்கையை
சுத்தம்
செய்யறக்
கையோடு...



இந்து
மதத்தையும்
கொஞ்சம்
செய்யலாம் !
திருமழிசை
காவேரி
திரையரங்கம்...

தரை
டிக்கட்
40 காசு

பெஞ்ச்
60
காசு

சேர்
ஒரு
ரூபாய்

கடைசியாக
பார்த்தப்
படம்

சிவாஜியின்
ஆண்டவன்
கட்டளை !
புலியும்
புத்தனும்
நண்பர்கள்தான்

இருவரும்
போராடியது
விடுதலைக்கு

இலங்கை
தீவில்
மட்டும்

புத்தம்
மரித்து
விட்டது

இறந்து
போன
புத்தருடன்

அடுத்தத்
திட்டம்
பற்றி

பேசுகிறது
எஞ்சியப்
புலி !

படம்-பிரதிக் கணேசன்