செவ்வாய், 20 மே, 2014

 கண்ணின்
கருவிழி
கறுப்பு
பெரியார்...

 சிந்தை
முழுவதும்
தமிழ்த் தேசியத்
தலைவர். ..

உடல் முழுதும்
குருதியாய்
இடதுசாரி
ரத்தம். ..

காதலுக்காக
உன் விரல்
இடும்
குங்குமத்தை. ..

தட்டிக்கொண்டே
இருக்கும்
என்
கரங்கள் !

( மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ. ..தொகுப்பிலிருந்து )







வாக்களித்தவர்கள்
வாழ்க்கையைத் தேடி
ஓடிக்
கொண்டிருக்கிறார்கள். ..

வெற்றிப்பெற்றவர்கள்
ஜோசியக்காரன் வீட்டில்
அமர்ந்து
நாள் குறிக்கிறார்கள் !

பல மாதங்கள்
கழித்துக்
கூடுகிறது. ..

பாராளுமன்ற
மாட்டுச்
சந்தை. ...

பலப் பாவிகளை மட்டுமேப்
பார்த்த
மைய மண்டபம். ..

பல நூறு
காவிகளின் வருகையில்
பதறி நிற்கிறது...

மிளகாய் பொடிகள்
தூவப்படும்
வேளையில். ...

ஓதப் படும்
ஓம் கிரீம் ஜிரீம்
மந்திரம் !