thaagamsenguttuvan
வெள்ளி, 6 ஜூன், 2014
கண்ணா
உன்
காலில்
செருப்பு
இல்லையா ?
மத
வெறியர்களை
பதம்
பார்க்க
தா !
படம் -பொன்மணி
கதவையே
திறக்காதே
மனிதா
வாசல்
நுழைவுப்
போராட்டம்
நடத்திப்
பார்க்கும்
மரம் .
எத்தனை
முறை
வெட்டினாலும்
வீட்டிற்குள்
எட்டிப்பார்க்கும்
பசைக்கரம் !
இந்த
விளக்கின்
கீழ்
நீ
அமர்ந்து
எழுதும்போதெல்லாம்...
உலகம்
அன்பெனும்
குடையின்
கீழ்
இயங்குவதை
உணர்ந்தெழுது !
உயர
உயர
பறந்து செல்
விடுதலை
விரக்தி
தரும் போது
திரும்பி
வா
காத்திருப்பேன்.
சிறகுகள்
பத்திரம்
திரும்பவும் செல்வாய்
பறப்பதும்
மறப்பதும்
பறவைக்கு மட்டுமல்ல
மனிதற்கும்
சேர்த்தே
எழுதப்பட்ட இலக்கணம் !
படம்-சசிவர்ணன்.. ஈரோடு
உன்னைப்
போலவே...
அழகிய
சண்டை
மீன் !
கனவில்
ஏற்படும்
பயங்கர
விபத்து.....
நிஜத்தில்
நெஞ்சில்
அழுத்துகிறது
அதிர்ச்சி !
கோடி
வண்ணங்களை
ரசித்துப்
பருகு..
கறுப்பு
வெள்ளை
கண்கள்
வேண்டும் !
ஒளிஓவியம்-மணிகண்டன் அழகர்
அன்பெனும்
ஆயுதத்தை
காட்டியே...
கடைசிவரை
அடிமையாக்கினோம்
பெண் இனத்தை !
படம்-அம்புஜா சிமி
பெண்களும்
பாலியல்
வன்முறை
செய்கிறார்கள்...
தினம்தோறும்
காலையில்
கணவனின்
பர்சை !
செய்திகளை
அழிக்கச்
சொல்லி
அழுத்தியப்பிறகும்
மீண்டும்
உறுதி
செய்யச்
சொல்கிறது
நீ
தந்த
புதிய
கைப்பேசி....
நீ
மட்டும்
உடனே
அழித்துவிடுகிறாய்
நினைவுகளை !
திராட்சைப்
பந்தலில்
காத்திருக்கிறேன்
உனக்காக...
வாட்சேப்
செய்தி
இன்னுமா
கிடைக்கவில்லை..?
பழரசமா
இதழ்ரசமா ?
பட்டிமன்றத்திற்கு
நேரமாச்சு !
( மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ... தொகுப்பிலிருந்து )
அதிகாலை
எழுந்து
மனைவி
கட்டித்தந்த
உணவுப்பெட்டியை
அலுவலக
ஊழியரிடம்
கொடுக்கின்ற
நேரத்தில்
வந்தது
அழைப்பு...
சாப்பிட்டாயா ?
மோடியின்
தாயாருக்கு
நவாஸ் ஷெரீப்
அனுப்பிய
வெள்ளைப்
புடவை...
இனியேனும்
குஜராத்தில்
எவரும்
கலவரத்தில்
இறக்கக்
கூடாது !
திரைப்படங்களில்
ஒரே
பாடலில்
வளர்ந்து விடும்
நாயகன்
போல்...
சாலைகளிலேயே
வளர்ந்துவிடுகின்றன
வல்லரசு
இந்தியாவின்
ஏழைக்
குழந்தைகள் !
எந்தப்
பல்கலைக்கழகத்தில்
பெற்றாய்...
காக்கவைக்கும்
கலைக்கானப்
பட்டத்தை ?
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)