வியாழன், 5 ஜூன், 2014

மண்ணாய்
போன
வாழ்வில்

மணியாய்
தூங்குது
தொட்டிலில்

பெண்ணாய்ப்
பிறந்தால்
சித்தாளூ

ஆணாயப்
பிறந்தால்
பெரியாளு

தேனீர்
விற்பவனுகாவது
பிறந்திருந்தா

வருங்காலத்தில்
பெரிய
ஆளு !

படம்-மணிகண்டன் அழகர்

வெட்கத்தால்
ஆண்களும்
தலைகுனிய
தொடங்கிவிட்டார்கள்...

முகநூல்
பெண்ணிடம் !
இயல்பாக
இடுப்பு
எலும்புதான்
தேயும்
ஆண்களுக்கு....

இப்போது
கழுத்து
எலும்பு
வேகமாக
தேய்கிறது...

வாய்மூடி
பேசும்
முகநூல்
மகிமை !
வெள்ளைத் தாளையும்
எழுதுகோளையும்
தவிர்த்திடுங்கள்...

மின்னஞ்சலைப்
பயன்படுத்தி
மரங்களைக் காத்திடுங்கள்...

இந்த அறிவிப்பை
பின்பற்றிய
பிறகுதான். ..

மரங்களும்
என் விரள்களும்
சேர்ந்தே மொட்டையாகியது !

படம்-உமா மணிபாரதி
இன்று
சுற்றுச்சூழல்
தினமாம்...

365 நாட்களுக்கும்
ஒவ்வொரு தினம்
ஒதுக்கப்பட்டப்பிறகு..

நமக்கான
நாளே
இல்லாமல் போய்விட்டது !
என் காதல்காரி....!

-தாகம் செங்குட்டுவன்



பச்சை வண்ண
சேலைக்காரி
வெள்ளைச் சிரிப்பு
அருவிக்காரி

கொங்கை பெருத்த
மலைக்காரி
மங்கையை  வெல்லும்
கலைக்காரி

விண்ணை  முட்டும்
வனக்காரி
கண்ணை மூடும்
வாசக்காரி

மடியில் தாலாட்டும்
பாசக்காரி
மொழியில் சீராட்டும்
நேசக்காரி

அள்ளி அள்ளித் தரும்
வள்ளல்காரி
துள்ளி துள்ளி எழும்
துள்ளல்காரி


தலைகுனிந்துப் பணியும்
வரைப்படக்காரி
தமிழ் வீரப்புலிகளின்
உறைவிடக்காரி

வயல்களைக்கொண்ட
உழவுக்காரி
கயல்களைக்கொண்ட
திரைக்கடல்காரி

எல்லைகளை இழந்த
அப்பாவிக்காரி
தொல்லைகளை சுமக்கும்
தியாகக்காரி

தலைகனம் இல்லா
காதல்காரி
தலைகோதி விடும்
தாய்மைக்காரி

பத்துக்கோடி உறவு
சொந்தக்காரி
பல்லாயிரமாண்டு
பந்தக்காரி



மேடு பள்ளம் இல்லா
சமவெளிக்காரி
கேடு உள்ளம் இல்லா
சமத்துவக்காரி


இலக்கியப் புதையல்
செல்வக்காரி
தண்ணீர் கேட்கும்
பிச்சைக்காரி


சிறையில் தவிக்கும்
தமிழ்த் தேசக்காரி
இந்திய வர்ணம்
பூசிய வேஷக்காரி





எப்படி போற்றுவேன்
உன்னைக் கண்ணே
உலக அழகியும்
உனக்குப் பின்னே

உன்னில் பிறந்தேன்
என் உயிர்ப்  பெண்ணே
உன்னில் புதைந்தேன்
என் தமிழ் மண்ணே !