தமிழக மக்களின் தீர்ப்பு மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது .எப்போதும் பெரியக் கூட்டணி அமைக்கும் கடசிகளுக்கே மிகப்பெரிய வெற்றியைத் தரும் மக்கள் இம்முறை 5 முனைப் போட்டி இருந்தும் அ.தி.மு.க வுக்கு இமாலய வெற்றியை அளித்திருக்கிறார்கள்.தனது ஆட்சிக்கு மக்கள் அளித்த நற்சான்று இது என்கிறார் முதல்வர்.உண்மையிலேயே அத்தகைய சிறப்பான ஆட்சி நடைபெறுகிறதா ? கொலை, கொள்ளை,மின்வெட்டு, ஊழல், கவுன்சிலர் அத்துமீறல், மோசமான சாலை வசதி,காவல் துறை பாராமுகம், மாநகராட்சி செயலற்றத் தன்மை ..இப்படி பல குறைகள்.அம்மாவுக்கு பயந்து அமைச்சர்கள் அடங்கி இருப்பதை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லாத நிலையில் மக்கள் அ.தி.மு.க வை அதுவும் இந்த மோடியின் அசுர வெற்றியில் ஆதரித்தது ஏன்? தி.மு.க காங் மேலுள்ள வெறுப்பா ? எது அ.தி.மு.க வை வெற்றிப் பெறச்செய்தது ? வாக்குப் பிரிந்ததால் வெற்றி என்றால் ..சொற்ப வாக்கில் தானே வென்றிருக்க வேண்டும். எதிர் கட்சிகள் சொல்வது போல் இது பணத்தால் வந்த வெற்றியா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக