புதன், 19 டிசம்பர், 2012

thaagamsenguttuvan: என்ன தண்டனை தரப்போகிறோம் ?!

thaagamsenguttuvan: என்ன தண்டனை தரப்போகிறோம் ?!: மாதம் 600 ரூபாய் போதும் ....இந்தியக் குடும்பம் வயிறார சாப்பிட ! சொன்னவர் டெல்லி காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சத் . அம்மணி தலையில் ஏதேனும் க...

என்ன தண்டனை தரப்போகிறோம் ?!

மாதம் 600 ரூபாய் போதும் ....இந்தியக் குடும்பம் வயிறார சாப்பிட ! சொன்னவர் டெல்லி காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சத் . அம்மணி தலையில் ஏதேனும் காயம் பட்டதால் "நடுவுல கொஞ்சம் பக்கத்த "காணலை போலிருக்கிறது ! இந்த அம்மையார் ஆளும் மாநிலத்தில் மக்கள் 600 ரூபாயில் குடும்பம் நடத்தினாலும் நடத்தலாம் ...ஆனால் எந்தக் குடும்பத்து பெண்ணிற்கும் கற்பு பாதுகாப்பு மட்டும் கிடைக்கவே கிடைக்காது ! இந்தியாவிலயே பெண்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இல்லாத மாநிலம் வல்லரசு (!) இந்தியாவின் தலைநகரம் . ஒருவேளை ராஜபக்சேவின் ஆட்களை ,தமிழ் பெண்களை சூறை யாடியதுபோதும் டெல்லி பெண்களையும் ஒரு கை பார்க்கும் பயிற்சியை காங்கிரஸ் கேட்டு பெற்றிருக்குமோ என்று அஞ்சத் தோன்றுகிறது காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியில் ,அதுவும் ஒரு பெண் முதல்வர் ஆட்சியில் . இருநாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த கற்பழிப்பு கொடூரம் உலகில் எங்காவது நடைப்பெற்றிருக்குமா எனபது கேள்விக்குறியே ! ஒரு பள்ளிப்பேருந்தில் குடித்துவிட்டு கும்மாளம் போட்டு வந்த ஆறு பேர் ,பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் ஒரு கல்லூரி மனைவியையும் அவர் காதலனையும் பார்த்து நிற்க ,அவர்களும் தங்களை போகும் வழியில் இறக்கி விட முடியுமா ?என்று கேட்க . அந்த காதல் கிளிகளை சுமந்து செல்கிறது அந்தப் பருந்து ! இரும்புத் தடியில் தாக்கப்படுகிறான் காதலன் !ஒருவர் மாறி ஒருவர் பேருந்தை ஓட்ட ....ஒருவர் மாறி ஒருவர் அந்த கல்லூரி மனைவியை சிதைத்து சின்னா பின்னம்மாக்குகின்றனர் ! இந்தக்கொடூரம் நடைபெறும் இரண்டு மணி நேரத்திற்கும் பேருந்து தலைநகரை வலம் வந்தபடியே இருக்கிறது .கறுப்புக் கண்ணாடியால் மூடப்பட்ட பேருந்தில் கதறும் அப்பெண்ணின் குரல் வெளியே கேட்கவில்லை . ஆறு மிருகங்களால் அடித்து துவைக்கப்பட்ட அப்பெண்ணும் அவன் காதலனும் ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர் ! இந்தக்கொடுமை நேற்று மக்களவையில் புயலைக்கிளப்ப ..வழக்கம் போல் சூடு சுரணை இன்றி கிடந்தது காங்கிரஸ் கட்சி . ஆறு பேரில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை தூக்கில் போடவேண்டும் என்று பலர் கோரிக்கை வைக்கின்றனர் . இந்நேரம் மருத்துவமனையில் பலியாகிவிட்டாளோ என்று கருதப்படும் அந்தத் தோழி இழந்ததை அவர்களை தூக்கில் போடுவதால் மீண்டும் தருவார்களா ? தூக்கு... தண்டனை இல்லை ...அது விடுதலை எனபது பலருக்கு புரிவது இல்லை .அவர்களை தண்டிப்பதற்கு முன் ..தலை நகரை கற்பழிப்பு நகரமாக மாற்றிய ஷீலா தீட்ஷத்துக்கும் ....காங்கிரஸ் தலைமைக்கும் நாம் என்ன தண்டனை தரப்போகிறோம் ?!

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

"கண்கெட்ட பின்னே சூரிய உதயம் "!

"கண்கெட்ட பின்னே சூரிய உதயம் " பழமொழி தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு மிகப்பொருத்தமாக உள்ளது . பள்ளி குழந்தைகள் பலியான பின்பு அரசு விழித்துக்கொண்டு பல சட்டங்கள் போட்டது .இன்னும் கூட பள்ளிக் குழந்தைகள் விலங்குகளைப்போல் ஆட்டோவிலும் வேனிலும் திணிக்கப்பட்டு பயணம் செய்கின்றன . அடுத்த சம்பவம் நடந்தப் பிறகே அரசு கண்துடைப்பு சட்டம் போடும் ! இன்று பேருந்து படிக்கட்டுப் பயணத்தில் பலியான மாணவர்கள் குறித்து நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து அரசு மீண்டும் தன் கண்துடைப்பு நாடகங்களை அரகேற்றி வருகிறது .படியில் பயணம் செய்வோர் மீது நடவடிக்கை பாய்கிறது . என்னக்கொடுமை பாருங்கள் ,படியில் தொங்குவதற்க்கு காரணமே உட்கார இடமில்லாத காரணத்தால்தான் . வேண்டுமென்றே படிக்கட்டில் பயணம் செய்பவர்கள் மீது நடவடிக்கைப் பாய்வதில் தவறு இல்லை .ஆனால், இடப்பற்றாக்குறை காரணமாக படியில் தொங்குவோர் மீது நடவடிக்கை எடுப்பது என்றால் அரசு தன் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் ! ஏராளமான share ஆட்டோக்கள் ஓடியும் பேருந்து நிரம்புகிறது என்றால், ஒன்று share ஆட்டோவில் பயணம் செய்ய வசதி இல்லாதோரும் இலவச பாஸ் வைத்திருக்கும் மாணவர்கள் மட்டுமே பேருந்தில் பயணம் செய்யும் கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள் . போக்குவரத்து துறை மற்றும் காவல்துறையின் பொறுப்பற்ற செயல்கள்தான் அப்பாவி மாணவர்களின் பலிக்கு காரணம் .தண்டிக்கப்படவேண்டியவர்கள் அவர்கள்தான் . ஒரு வாகனத்தில் அதிக சுமை ஏற்றினால் தண்டிக்கும் காவல்துறை என்றாவது அதிக பயணிகளை ஏற்றிவரும் பேருந்து மீது நடவடிக்கை எடுத்துள்ளதா ? அல்லது எடுக்கும் தைரியம்தான் உள்ளதா ? சென்னையின் மக்கள் தொகைக்கும் அதன் பரப்பளவிற்கும் ஏதேனும் சம்மந்தம் உள்ளதா ? மக்கள் வசிப்பதற்கு இடமே இல்லாத போது அவர்கள் பயணம் செய்யும் பேருந்தில் இடம் இருக்குமா ? குற்றவாளி யார் ? படிக்கட்டில் தொங்குபவனா ? மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப தொலைநோக்கு திட்டங்களை தீட்டாத அரசியல் வியாதிகளா ? சைரன் ஒலியுடன் ஹோண்டா சிட்டியில் பயணம் செய்யும் அந்த ஒன்றுக்கும் உதவாத அதிகாரியை பேருந்து படிக்கட்டில் பயணம் செய்ய வைத்து கொன்று இருக்க வேண்டாமா ? பேருந்தை இடித்தது ஆந்திர லாரியாம்! அந்த காலை நேரத்தில் லாரியை லஞ்சம் வாங்கிக்கொண்டு உள்ளே அனுமதித்த போக்குவரத்து காவலர் யார்? அவர் மீது நடவடிக்கை எடுக்காத அரசு, அப்பாவிமாணவர்களை தண்டிப்பது நியாயமா ? படிக்கட்டில் பயணம் செய்ய முடியாத கதவுப் பேருந்துகள் தற்போது உள்ளன .ஏன் அரசு அனைதுப்பேருந்துகளுக்கும் கதவு போடவேண்டியது தானே ? சென்னையில் இருக்கும் அனைத்து பேருந்து நிறுத்தத்திலும் பேருந்தா நிற்கிறது ? share ஆட்டோதானே நிற்கிறது !இந்த செயலுக்கு, பேருந்து ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் தரப்படும் ஷேர் எவ்வளவு ? பேருந்துகளை நிறுத்திவிட்டு பேசாமல் அரசு ஷேர் ஆடடோ கழகம் தொடங்கலாமே ? திட்டமிடல் இல்லாத அரசு ,ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகி கண்துடைப்பு நாடகங்களை நடத்துவதை விட்டுவிட்டு மக்கள் தொகைக்கு ஏற்ப தன் தொலைநோக்கு திட்டங்களை தீட்ட வேண்டும் .உடனடியாக தமிழக மாவட்ட தலைநகரங்களை சென்னைபோல் உயர்த்த திட்டமிட வேண்டும் .சென்னையில் குவிந்திருக்கும் அரசு மற்றும் தனியார் அதிகார மையங்கள் தமிழகம் எங்கும் பரவலாகப்படவேண்டும் .அணைத்து மாவட்டங்களும் சரிசமமாக உயரும் பட்சத்தில் மற்ற மாவட்டத்தினர் ஏன் சென்னையில் குவியப்போகிறார்கள் ? கல்வி ,மருத்துவம் ,வேலைவாய்ப்பு ,இம்மூன்றுக்காக மட்டுமே அனைவரும் சென்னையை நோக்கி படையெடுக்கின்றனர் .இனி புதிய மருத்துவமனையா ?பள்ளியா ?வர்த்தக நிறுவனமா ? சென்னைக்கு இல்லை .வெளி மாவட்டங்களுக்குதான் என்று அரசு என்று முடிவு எடுக்கிறதோ அன்றுதான் சென்னைக்கு விமோசனம் ! இல்லையேல் சென்னை ஐ .டி சிட்டியாக மாறாது ..மும்பை தாராவியாக தான் மாறும் ! எத்தனை மேம்பாலங்கள் கட்டினாலும் போக்குவரத்து நெரிசலையோ ,விபத்துக்களையோ தடுக்க முடியாது . ஜால்ரா அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அறிவார்ந்த அதிகாரிகளுக்கு பதவி தரவேண்டும் .இல்லை என்றால் முதல்வரின் 2023 தொலைநோக்கு திட்டம் 2073 ஆம் ஆண்டிலும் நிறைவேற வாய்ப்பில்லை ! படிக்கட்டிலே தொங்கியே பரலோகம் போகவேண்டியதுதான் !

சனி, 15 டிசம்பர், 2012

thaagamsenguttuvan: log on www.thaagam.com

thaagamsenguttuvan: log on www.thaagam.com: log on www .thaagam .com தாகம் இந்த இதழில் .....*அரசின் அதர்மபுரி !* தீண்டாமை வைத்த தீ ...! -மல்லை சத்யா .*காங்கிரஸின் கேவலப் பிழைப்பு -குஜர...

log on www.thaagam.com

log on www .thaagam .com தாகம் இந்த இதழில் .....*அரசின் அதர்மபுரி !* தீண்டாமை வைத்த தீ ...! -மல்லை சத்யா .*காங்கிரஸின் கேவலப் பிழைப்பு -குஜராத் சம்பவம் !* ஐஸ்வர்யா தற்கொலை ...காங்கிரஸில் பெருகும் யுவதி ராஜாக்கள் !* சாதீ ...வே .மதிமாறன் கட்டுரை .*வைகோவின் பெருந்தன்மை ! தணியாத தாகம் தொடர் .*போபால் நயவஞ்சகம் ! முத்துகிருஷ்ணன் சுழற்றும் சவுக்கு .*"மனு"க்கள் இன்னும் மறையவில்லை ....பா .ம .க !*போதை யாத்திரைக்கு எதிரான வைகோவின் பாதை யாத்திரை !*தனி நாடான கர்நாடகா !

வியாழன், 6 டிசம்பர், 2012

thaagamsenguttuvan வியாழன், 6 டிசம்பர், 2012 தணியாத தாகம் .....4 வைகோவின் பெருந்தன்மை !

ஒன்றுமில்லை அண்ணன் .ஒரு சின்ன சிக்கல் .குற்றாலீஸ்வரன் அப்பா விழாவுக்கு தன் மகனை அழைத்து வர பயப்படுகிறார் !" நீங்கள் அவனை பாராட்டினால் முதல்வர் எந்த உதவியும் செய்ய மாட்டாராம் "!."அதைப் பற்றிக்கவலை இல்லை .திட்டமிட்டப்படி விழா நடக்கும் ,நீங்கள் குற்றாலீஸ்வரனை பாராட்டிப் பேசுங்கள் .விருதை நாங்கள் அந்தத் தம்பியின் வீட்டிற்க்கு அனுப்பிவிடுகிறோம் .அமுதா உறுதியாக வருகிறார் " என்றேன் .இரவு 11 மணிக்கு வைகோவின் வீட்டு வரவேற்பறையில் ,அவருக்காக ஈழத்தில் உயிர் தியாகம் செய்த சரத்தின் படத்தை பார்த்தபடியே வைகோ சொன்னார் ..."அந்த தந்தையின் பயம் நியாயமானது .நான் குற்றாலீஸ்வரனை பாராடிப்பேசுவதால் ஜெயலலிதா அவனுக்கு உதவிகள் செய்யாமல் போய்விடுவார் .நான் விழாவுக்கு வருவது முக்கியமில்லை குற்றாலலிங்கத்திற்கு நீங்கள் விழா நடத்துவதில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது .அவனை வாழ்த்திப் பேச ஏராளமான குறிப்புகளை தயாரித்து வைத்திருந்தேன் . அந்தத் தம்பிக்கும் அமுதாவிற்கும் என் வாழ்த்துக்களை சொல்லவும் " பெருந்தன்மையுடன் பேசினார் வைகோ .இல்லை நீங்கள் விழாவிற்கு வந்தால் போதும் .மற்றதை பற்றிக் கவலையில்லை என்று நான் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் வைகோ கேட்கவில்லை ."திருமணம் என்றால் மாப்பிள்ளை நான்தான் ...இறுதி சடங்கு என்றால் பிணம் நான்தான் "என்று மேடைக்கு ஆசைப்படும் தலைவர்கள் வாழும் காலத்தில் தன்னால் யாருக்கும் எந்த இழப்பும் நேரக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார் ."விழாவை சிறப்புடன் நடத்துங்கள் ஆனா ரூனாவிடம் என் வாழ்த்தை சொல்லுங்கள் தம்பி .அடுத்த தாகம் விழாவில் நான் தான் சிறப்பு விருந்தினர் . கை கூப்பி விட்டு படுக்கை அறைக்கு சென்றுவிட்டார் . "தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள்பவர்கே " சுவற்றில் எழுதி இருந்த குறளைப் பார்த்துக்கொண்டே கிளம்பினோம் ! அடுத்த நாள் காலை..... மீண்டும் மியூசிக் அகாடெமியில் இருந்து அழைப்பு ...வேறு என்ன ..குன்னக்குடியா ? புஷ்பவனமா ? .....தணியாத தாகம் .....தொடரும் ....