வெள்ளி, 4 ஜனவரி, 2013

இப்படியும் ஒரு தலைவர் ! (தணியாத தாகம் )

சென்னை ஐ .ஐ .டி .கணித மேதை, பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களை வைகோவிடம் அறிமுகப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு . தாயகத்தில் அவர்களை அறிமுகப்படுத்தியபோது அந்த ஆண்டு மகளிர் தினத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடுத்துவதாக கூறினார் .சொன்னபடியே செய்துக் காட்டினார் . பேராசிரியரை அழைத்து சென்ற தினத்தில் தாயகத்தில் ஒரு வினோத காட்சியை கண்டேன் . அன்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அங்கு வைகோ முன் அமர்ந்திருந்தனர் .ஒவ்வொரு தம்பியை அழைக்கும் வைகோ அவரிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார் .உதவிக்கேட்டு வரும் தம்பியின் கோப்பை சரி பார்த்தப்பின் அந்தத் தம்பியின் முன்னிலையிலே தொலைபேசி எண்ணை சுழற்றுகிறார் ...sir iam vaiko here .A humble request . one of my close candidate has applied job in your concern .pls consider his application .இப்படி அன்று மட்டும் பல படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தந்தார் ! இப்படி ஒருக் காட்சியை நான் என் வாழ்நாளில் எந்தக்கட்சி அலுவலகத்திலும் கண்டதில்லை ! எத்தனையோ நேர்காணல்களை அவரிடம் எடுத்துள்ளேன் . இந்த மனிதரின் வேகம் ,பேச்சு ,கட்டுப்பாடு ,துணிவு என்போன்ற இளைஞர்களை கவர்ந்ததில் ஆச்சர்யம் இல்லை . அவர் முதல் நடைபயணம் சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி சாலையில் நிறை உற்றபோது அவருடன் நடந்து செல்லும் அறிய வாய்ப்பினைப் பெற்றேன் .தொண்டர் அணியுடன் முன்னே நடந்து சென்றவர் பயணத்தை நிறைவு செய்யும் நேரத்தில் சட்டென திரும்பி பார்த்து, வேகமாக பின்னோக்கி நடந்த வந்தார் .நடைபயணத்தில் நடந்து வந்த தம்பி, தான் வைத்திருந்த கொடிக்கம்பில் லேசாக அங்கு நின்றிருந்த காவல்துறை வாகனத்தில் தட்டி விட்டார் .கோபமுற்ற வைகோ விரைந்து சென்று அந்தத் தம்பியின் கைகளில் இருந்த ம.தி .மு ,க .கொடியை பிடுங்கிக்கொண்டு ." தயவு செய்து நீ ஊருக்கு கிளம்பு .கட்டுப்பாடு இல்லாதவன் என் கட்சிக்கு வேண்டாம் " என்று சொல்லி அனுப்பி விட்டார் . அன்றைய நடைபயணம் தொடங்கி இன்றைய மதுவிலக்கு பயணம் வரை அவர் சாதித்த சாதனைகள் ஏராளம் .இருந்தும் வைகோ ஏன் முதல்வர் வேட்பாளராக வரவில்லை என்று நடுநிலையாளர்களுக்கு கவலை உண்டு . கூட்டணி அரசியலில் ஒவ்வொரு முறையும் பல்லக்கு ஏறும் தலைவர்கள் மத்தியில் இவர் பல்லக்கு தூக்கும் தலைவராக மாறிவிடுகிறார் . வைகோவுக்கு நான் வைக்கும் ஒரே வேண்டுகோள், தயவுசெய்து இனி மற்றக் கழகங்களுடன் கூட்டணி வைக்காதீர்கள் .மூன்றாவது அணிக்கு நீங்கள் தலைவராகுங்கள் ! ஓட்டு அரசியல் பற்றி கவலைப்படாதீர்கள் .கட்சியை நம்பி நீங்கள் இல்லை .உங்களை நம்பித்தான் கட்சி ! மாற்று தலைவராக உங்களை மக்கள் எப்போதோ தேர்ந்தெடுத்திருப்பார்கள் ....நீங்கள் தான் கட்சியைக்காப்பாற்ற கலைஞரிடமும் ஜெயலலிதாவிடமும் கூட்டணி அமைத்தீர்கள் . உங்களை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் .உங்களையே நம்பி இருக்கும் தொண்டர்கள் ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகிறார்கள் . மாற்று தலைவராக உங்களை மக்கள் ஏற்க தயார் ....மீண்டும் அவர்களுடன் கூட்டணி அமைத்து உங்கள் நம்பக தன்மையை இழந்துவிடாதீர்கள் . காலம் உங்களை அங்கீகரித்தே தீரும் . " என் பயணம் முட்கள் நிறைந்தது .துன்பம் அனுபவிப்பவரே என்னுடன் வரலாம் .சுகம் தேடுவோர் வர வேண்டாம் " ம .தி .மு .க .தொடங்கியப்போது நீங்கள் சொன்னது .சுகம் தேடியவர்கள் உங்களுடன் இல்லை .மற்றவர்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் ? இது வரை வைகோ உடன் எனக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டேன் . அடுத்தத் தலைவர் ......கலைஞர்!! -தணியாத தாகம் தொடரும் சென்னை ஐ .ஐ .டி .கணித மேதை, பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களை வைகோவிடம் அறிமுகப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு . தாயகத்தில் அவர்களை அறிமுகப்படுத்தியபோது அந்த ஆண்டு மகளிர் தினத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடுத்துவதாக கூறினார் .சொன்னபடியே செய்துக் காட்டினார் . பேராசிரியரை அழைத்து சென்ற தினத்தில் தாயகத்தில் ஒரு வினோத காட்சியை கண்டேன் . அன்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அங்கு வைகோ முன் அமர்ந்திருந்தனர் .ஒவ்வொரு தம்பியை அழைக்கும் வைகோ அவரிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார் .உதவிக்கேட்டு வரும் தம்பியின் கோப்பை சரி பார்த்தப்பின் அந்தத் தம்பியின் முன்னிலையிலே தொலைபேசி எண்ணை சுழற்றுகிறார் ...sir iam vaiko here .A humble request . one of my close candidate has applied job in your concern .pls consider his application .இப்படி அன்று மட்டும் பல படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தந்தார் ! இப்படி ஒருக் காட்சியை நான் என் வாழ்நாளில் எந்தக்கட்சி அலுவலகத்திலும் கண்டதில்லை ! எத்தனையோ நேர்காணல்களை அவரிடம் எடுத்துள்ளேன் . இந்த மனிதரின் வேகம் ,பேச்சு ,கட்டுப்பாடு ,துணிவு என்போன்ற இளைஞர்களை கவர்ந்ததில் ஆச்சர்யம் இல்லை . அவர் முதல் நடைபயணம் சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி சாலையில் நிறை உற்றபோது அவருடன் நடந்து செல்லும் அறிய வாய்ப்பினைப் பெற்றேன் .தொண்டர் அணியுடன் முன்னே நடந்து சென்றவர் பயணத்தை நிறைவு செய்யும் நேரத்தில் சட்டென திரும்பி பார்த்து, வேகமாக பின்னோக்கி நடந்த வந்தார் .நடைபயணத்தில் நடந்து வந்த தம்பி, தான் வைத்திருந்த கொடிக்கம்பில் லேசாக அங்கு நின்றிருந்த காவல்துறை வாகனத்தில் தட்டி விட்டார் .கோபமுற்ற வைகோ விரைந்து சென்று அந்தத் தம்பியின் கைகளில் இருந்த ம.தி .மு ,க .கொடியை பிடுங்கிக்கொண்டு ." தயவு செய்து நீ ஊருக்கு கிளம்பு .கட்டுப்பாடு இல்லாதவன் என் கட்சிக்கு வேண்டாம் " என்று சொல்லி அனுப்பி விட்டார் . அன்றைய நடைபயணம் தொடங்கி இன்றைய மதுவிலக்கு பயணம் வரை அவர் சாதித்த சாதனைகள் ஏராளம் .இருந்தும் வைகோ ஏன் முதல்வர் வேட்பாளராக வரவில்லை என்று நடுநிலையாளர்களுக்கு கவலை உண்டு . கூட்டணி அரசியலில் ஒவ்வொரு முறையும் பல்லக்கு ஏறும் தலைவர்கள் மத்தியில் இவர் பல்லக்கு தூக்கும் தலைவராக மாறிவிடுகிறார் . வைகோவுக்கு நான் வைக்கும் ஒரே வேண்டுகோள், தயவுசெய்து இனி மற்றக் கழகங்களுடன் கூட்டணி வைக்காதீர்கள் .மூன்றாவது அணிக்கு நீங்கள் தலைவராகுங்கள் ! ஓட்டு அரசியல் பற்றி கவலைப்படாதீர்கள் .கட்சியை நம்பி நீங்கள் இல்லை .உங்களை நம்பித்தான் கட்சி ! மாற்று தலைவராக உங்களை மக்கள் எப்போதோ தேர்ந்தெடுத்திருப்பார்கள் ....நீங்கள் தான் கட்சியைக்காப்பாற்ற கலைஞரிடமும் ஜெயலலிதாவிடமும் கூட்டணி அமைத்தீர்கள் . உங்களை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் .உங்களையே நம்பி இருக்கும் தொண்டர்கள் ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகிறார்கள் . மாற்று தலைவராக உங்களை மக்கள் ஏற்க தயார் ....மீண்டும் அவர்களுடன் கூட்டணி அமைத்து உங்கள் நம்பக தன்மையை இழந்துவிடாதீர்கள் . காலம் உங்களை அங்கீகரித்தே தீரும் . " என் பயணம் முட்கள் நிறைந்தது .துன்பம் அனுபவிப்பவரே என்னுடன் வரலாம் .சுகம் தேடுவோர் வர வேண்டாம் " ம .தி .மு .க .தொடங்கியப்போது நீங்கள் சொன்னது .சுகம் தேடியவர்கள் உங்களுடன் இல்லை .மற்றவர்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் ? இது வரை வைகோ உடன் எனக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டேன் . அடுத்தத் தலைவர் ......கலைஞர்!! -தணியாத தாகம் தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக