ஞாயிறு, 18 மே, 2014

சமைல்காரன் சுவைத்தப்பிறகே
நமக்குப்பறிமாறப்படுகிறது.

கொத்தனார்
குடும்பம் நடத்தியப் பிறகே...
புது மனை புகுவிழா.

பறவைகள் சுவைத்தப்
பிறகே...
நமக்குப்பழங்கள்.

சூரியன் குடித்த மீதியே ..
நமக்கு குடிநீர்.

மீன்கள் குடித்த மீதியே...
கடல்.

எறும்புகள் சேமிப்புக்கு போக ...
எஞ்சியதே சர்க்கரை.

ஈக்கள் ருசி பார்தப்பிறகே..
இலை போடப் படுகிறது.

மரங்கள் அனுமதித்தப்பிறகே..
அனுப்படுகிறது காற்று.

நேற்றைய சுடுகாடு. ..
இன்றைய வீட்டு மனை.

இப்படி. ..எதுவுமே
 நமக்கு நமதாகாத போது..
நான் என்ற அகந்தை எதற்கு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக