ஞாயிறு, 18 மே, 2014

உற்றுப்பார் இருட்டிலும்... உன் நிழலாக நானிருப்பேன்

உடுத்திப்பார் அந்த சேலையை.... நூலாக எனை நெய்திருப்பேன்

பாடிப்பார் பிடித்தப் பாடலை...ஓராயிரம் பார்வையிலே

ஆடிப்பார் படித்த பரதத்தை...வழிந்திடுவேன் உன் வியர்வையிலே


கிள்ளிப்பார் நீயே உனை...வலியால் நானன்றோ துடித்திடுவேன்

அள்ளிப்பார் நீரினை...கைகளில் நான்தானே தவழ்ந்திருப்பேன்

எட்டிப்பார் ஜன்னலில் ...எதிரிலேயே நின்றிருப்பேன்

தட்டிப்பார் கரங்களை ...அருகிலேயே அமர்ந்திருப்பேன் !

( தாகம் செங்குட்டுவன் -மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ... .தொகுப்பிலிருந்து 2005)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக