ஞாயிறு, 18 மே, 2014

அஜித் பிறந்த நாள் செய்திகளை முகநூலில் பார்க்கும் போது காதல் கோட்டை நினைவுகள் நெஞ்சில் வீசுகிறது. தாகம் இதழின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தவர் தயாரிப்பாளர் அண்ணன் சிவசக்தி பாண்டியன். அவரதுப் படங்களின் சிறப்புக்காட்சி தவறாமல் தாகத்திற்கு வழங்கப்படும்.அப்படி காதல் கோட்டையின் சிறப்புக்காட்சி சென்னை பிலிம் சேம்பரில்.இயக்குனர் அகத்தியன் , அண்ணன் சுபவீ அனைவரும் வந்துவிட்டனர்.அஜித் மட்டும் காணவில்லை .அன்று காலை 8 மணிக்குதான் அவரது வீட்டிற்கு சென்று அழைத்தேன்.'10 மணி விழாவுக்கு 8 மணிக்கு அழைப்பா ' ? என்று அவர் கேட்க.நீங்கள் இன்றுதானே சென்னைக்கு வந்தீர்கள் என்று சமாளிக்க ஒரு வழியா வருவதாக ஒப்புக்கொண்டார்.10 மணிக்கு காட்சி தொடங்கியும் அஜித் வராதது அவர் வருவதாக நம்பி டிக்கட் வாங்கியவர்களின் முறைப்புக்கு ஆளாக வேண்டி இருந்தது.படம் தொடங்கி அரைமணி நேரம் கழித்து நான் வெளியில் வந்தால் ...அஜித் அவர் கார் மீது சாய்ந்தபடி தம் கட்டிக் கொண்டு இருந்தார்.உள்ளே வாங்க என்று அழைத்தால்..'பாஸ் 50 முறை பாத்துட்டேன் .இடைவேளையில் வருகிறேன்' என்றார்.பிறகு இரண்டு வார்த்தை பேசிவிட்டு கிளம்பி விட்டார். கடைசி நேரத்தில் அழைத்தும் தலைகனம் இன்றி வந்த அவரை தாகம் குழு அன்புடன் அனுப்பி வைத்து.படத்தைப்பற்றி அகத்தியன் பேசினார்.அண்ணன் சுபவீ பேச்சுதான் சுவாரஸ்யம்.'வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்காய்' பாடலில் ஆடிய நடிகை புடவை அணிந்திருந்தாரா பூநூல் அணிந்திருந்தாரா ? என்று பேச அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக