ஞாயிறு, 18 மே, 2014

இன்று சனிக்கிழமை.. !

-தாகம் செங்குட்டுவன்
________________________________________

மாலை 5 மணிக்கெல்லாம்
மக்கள் கூட்டம் கூட்டமாக

வாரக்கூலி வகை வகையான
வண்ணங்களில் வயிற்றுக்குள்

ரத்தம் முழுவதும் அமிலமாக மாறும் போது
ரதத்தின் ரத்தத்திற்கு நன்றி நவிலும் தலைவி



தேர்தல் வெற்றிப் பற்றிய விவாதங்கள்
தோல்விப் பற்றிய ஓயாத அலசல்கள்

அரசேத்  தோண்டிய இந்த ஆழ்துளை கிணற்றில
அடுக்கடுக்காக விழும் குடி மகன்கள்


வாக்கு சதவீதத்தை பற்றி சிந்திக்கும் எவனும்
வாழ்க்கை சிதைவதைப் பற்றி சிந்திக்கவில்லை

முகத்தில் திராவகம் வீசினால் தண்டனை ...
வயிற்றில் ஊற்றிக் கொல்லும் அரசுக்கு ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக