இன்று ...மே 18
தமிழர் படுகொலை 5 ஆம் ஆண்டு ...
நக்கீரன் தொகுப்பில் வெளிவந்த
எனதுக் கவிதை ....
சரித்திர சந்திரன் !
-தாகம் செங்குட்டுவன்
______________________
ஆயுதம் செய்யாததை -உன்
அப்பாவி மௌனம் சாதித்தது
காதலர் தினம் கொண்டாடியவர்களை
களத்திற்கு அழைத்து வந்தவன் நீ
கப்பல் படை ,காலாட் படை ,விமானப்படை
இருந்தும் தோற்றோம்
மழலை சிரிப்பு ,ஏக்கப்பார்வை ,அன்பு முகம்
கண்டுதானே வீரம் பெற்றோம்
தண்ணீர் இன்றி தவிக்கும் எங்களுக்கு
வீரம் வந்ததே இல்லை
செந்நீர் குளத்தில் நீங்கள் மிதந்தபோதும்
எங்களுக்கு ஈரம் மட்டுமே வந்தது
எப்போதும் அரசியல் ராஜா -ராணிக்கு
சாமரம் வீசும் எம் தமிழகம்
முதல்முறையாக எங்கள் ராஜாவின்
ரோஜாவை ஏந்தியது தமிழ் அகம்
சிறுவர்களை கொண்டப் படை
என்பது பலரின் குற்றச்சாட்டு
தன் சிறு குழந்தையையும் இனத்திற்கு
தந்தானே ....
எங்கேப் பாராட்டு ?
உண்மையை சொல்... நீ உண்பது
தின்பண்டமா ...சயனைடு குப்பியா ?
அந்த ஆத்திரத்தில்தான் உன்னை
சல்லடை ஆக்கினானா சிங்களன் ?
ஆயுதத்தால் வெல்லமுடியாத ஆங்கிலேயனை
அகிம்சை காந்தி விரட்டினார் இங்கு
அறவழியும் ,ஆயுதமும் பெறமுடியாததை
" குழந்தை காந்தி" தரப்போகிறாய் அங்கு
ஈழத் தந்தை செல்வா ,ஈழத் தலைவர் பிரபாகரன்
ஈழ மகன் பாலச்சந்திரன்
காந்தள் மலர் ,புலிக்கொடி ,பனைமரம்
அவை போல் இனி நீ நிரந்தரம்
எந்த நாட்டு விடுதலையும் பாலகனால்
கிடைத்ததாக வரலாறு இல்லை
தமிழ் ஈழம் உன்னால் கிடைத்ததாக
படைக்க போகிறோம் புது வரலாறு
சிலுவையில் ஏசுபிரான் அறையப்பட்டப்
பிறகுதான் வென்றது யூத இனம்
சிறுவன் நீ சிதைக்கப்பட்ட பிறகுதான்
சீறிப்பாய்கிறது எம் தமிழினம்
ஒன்று சேராத நண்டினம் ...அவப்பெயர்
நீக்கியவன் ...பாலச்சந்திரன்
தலைவர்களே இல்லாத ஒருப் புரட்சி ...
தமிழகத்தில் தந்த சரித்திரன் !
தமிழர் படுகொலை 5 ஆம் ஆண்டு ...
நக்கீரன் தொகுப்பில் வெளிவந்த
எனதுக் கவிதை ....
சரித்திர சந்திரன் !
-தாகம் செங்குட்டுவன்
______________________
ஆயுதம் செய்யாததை -உன்
அப்பாவி மௌனம் சாதித்தது
காதலர் தினம் கொண்டாடியவர்களை
களத்திற்கு அழைத்து வந்தவன் நீ
கப்பல் படை ,காலாட் படை ,விமானப்படை
இருந்தும் தோற்றோம்
மழலை சிரிப்பு ,ஏக்கப்பார்வை ,அன்பு முகம்
கண்டுதானே வீரம் பெற்றோம்
தண்ணீர் இன்றி தவிக்கும் எங்களுக்கு
வீரம் வந்ததே இல்லை
செந்நீர் குளத்தில் நீங்கள் மிதந்தபோதும்
எங்களுக்கு ஈரம் மட்டுமே வந்தது
எப்போதும் அரசியல் ராஜா -ராணிக்கு
சாமரம் வீசும் எம் தமிழகம்
முதல்முறையாக எங்கள் ராஜாவின்
ரோஜாவை ஏந்தியது தமிழ் அகம்
சிறுவர்களை கொண்டப் படை
என்பது பலரின் குற்றச்சாட்டு
தன் சிறு குழந்தையையும் இனத்திற்கு
தந்தானே ....
எங்கேப் பாராட்டு ?
உண்மையை சொல்... நீ உண்பது
தின்பண்டமா ...சயனைடு குப்பியா ?
அந்த ஆத்திரத்தில்தான் உன்னை
சல்லடை ஆக்கினானா சிங்களன் ?
ஆயுதத்தால் வெல்லமுடியாத ஆங்கிலேயனை
அகிம்சை காந்தி விரட்டினார் இங்கு
அறவழியும் ,ஆயுதமும் பெறமுடியாததை
" குழந்தை காந்தி" தரப்போகிறாய் அங்கு
ஈழத் தந்தை செல்வா ,ஈழத் தலைவர் பிரபாகரன்
ஈழ மகன் பாலச்சந்திரன்
காந்தள் மலர் ,புலிக்கொடி ,பனைமரம்
அவை போல் இனி நீ நிரந்தரம்
எந்த நாட்டு விடுதலையும் பாலகனால்
கிடைத்ததாக வரலாறு இல்லை
தமிழ் ஈழம் உன்னால் கிடைத்ததாக
படைக்க போகிறோம் புது வரலாறு
சிலுவையில் ஏசுபிரான் அறையப்பட்டப்
பிறகுதான் வென்றது யூத இனம்
சிறுவன் நீ சிதைக்கப்பட்ட பிறகுதான்
சீறிப்பாய்கிறது எம் தமிழினம்
ஒன்று சேராத நண்டினம் ...அவப்பெயர்
நீக்கியவன் ...பாலச்சந்திரன்
தலைவர்களே இல்லாத ஒருப் புரட்சி ...
தமிழகத்தில் தந்த சரித்திரன் !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக