சனி, 12 ஜூலை, 2014

பறந்ததில்
பிடித்ததை
கூண்டில்
அடைக்கிறோம்

மலர்ந்ததில்
பிடித்ததை
வீட்டில்
வளர்கிறோம்

கவர்ந்ததை
கடிவாளமிட்டே
நமதாக்கிக்
கொள்கிறோம் ....

பிறகெப்படி
பறக்கும்
மணக்கும்
கவரும் ?

மீண்டும்
அகப்படாத
நிலவை
ரசிக்கிறோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக