வியாழன், 19 ஜூன், 2014

களத்துமேட்டில்
கடலைக்காய்
காயவைக்கும்
போது

உன்
மடியில்
படுத்து
உறங்குவேன்

கண்ணய்யனை
எனக்கு
சுற்றிப்போடச்
சொல்வாய்

காலால் பிறந்த
பார்வதியை
குடலேற்றம்
எடுக்கச்சொல்வாய்

விளையாட்டில்
கண்ணடிப்பட்டால்
முலைப்பால்
பீய்ச்சச் சொல்வாய்

காராமணி
பறித்தவர்களுக்கு
எட்டணா
கொடுக்கச்சொல்வாய்

சகலகலாவல்லவன்
பார்க்க
நண்பர்களுக்கு சேர்ந்து
பத்து ரூபாய் தருவாய்

உன்
முந்தானை
எனக்கு ஏ.டி.எம்
முத்தம் பாஸ்வார்டு

பாரதிராஜா படத்து
காந்திமதி போல்
நீ ரவிக்கை அணியாத
பெரியம்மா

எத்தனைக்குடும்பப்
பஞ்சாயத்துகளை
திண்ணையிலேயே
தீர்த்து வைப்பாய்

இன்னைக்கு கூட
தவறி
விழப்
பார்த்தேன்

எங்கப் போன
என்
ரங்கநாயகி
ஆயா ?

சுத்திப்போட
ஏங்குறான்
பெரிய
பேரன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக