தாகம்
இதழ் 1992 ஆம் ஆண்டு அனைத்துக் கல்லூரி மாணவர் இதழாய் தொடங்கப்பட்டது
.வரும் தமிழ் புத்தாண்டு தை திருநாளில் தாகம் 22 ஆம் ஆண்டில் அடி எடுத்து
வைக்கிறது . நான் சந்தித்த தலைவர்கள் ,பத்திரிகையாளர்கள் ,மனித நேய
பண்பாளர்கள் மற்றும் பல நிகழ்வுகளை தாகம் மற்றும் முகநூளில் "தணியாத தாகம் " எழுத உள்ளேன்
நண்பர்களே .log on www .thaagam .com .முதல் தலைவர் வைகோ ! 1992 ஆம் ஆண்டு
அவர் அண்ணாநகர் டவர் எதிரில் உள்ள ஒய் பிளாக் வீட்டில் வசித்து வந்தார்
.இப்போது வைகோ இருப்பது எல் பிளாக் வீட்டில் . 1992 ஆம் ஆண்டு
— Karthik Mukundan மற்றும் 16 பிறர் பேர்களுடன்
வைகோ தி .மு .க. வில் இருந்து வெளியேற நிர்பந்தித்த ஆண்டு ."கருவின்
குற்றம்" கவிதையை நாஞ்சிலார் எழுத, அவரை கட்சியை விட்டு நீக்கினார் கலைஞர் !
அது பற்றி தி .மு .க வினர் கருத்து கூற தயங்கிய நிலையில் வைகோ பகிரங்கமாக
பொதுக்கூட்டத்தில் ,நாஞ்சிலாரின் நீக்கத்தை மறு பரிசீலனை செய்ய சொன்னார் !
தி .மு .க தலைமை மீது வைகோ போட்ட முதல் குண்டு இது ! தாகம் இதழுக்காக முதல்
முறையாக 1992 ஆண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் வைகோவின்
இல்ல வரவேற்பறையில் காத்திருந்தோம் .....அது ஒரு முன்னிரவு நேரம் .அவர்
வீட்டு மேல்தளத்திலிருந்து ஆங்கில பாடல் ஒலி நம் காதில் ஒலிக்கிறது ! அது
அப்போதைய லயோலா கல்லூரி மாணவர் துரை வையாபுரியின் அறையில் இருந்து
வந்துகொண்டு இருந்தது ! சமையல்காரர் எங்களுக்கு தேநீர் தர கதவை திறக்க
உள்ளே வைகோ யாரிடமோ ஆக்ரோஷமாக பேசிக்கொண்டு இருந்தார் ! கதவை சமையல்காரர்
சரியாக மூடாததால் வைகோவின் பேச்சு எங்களுக்கு தெளிவாக கேட்டது ! "எத்தனை
நாளைக்கு நான் இந்த கொடுமையை அனுபவிப்பது ....ஒரு பூனையை ஒரு அறையில்
பூட்டி விட்டு ஜன்னல்களையும் கதவுகளையும் மூடிவிட்டு அதை பிடிக்க சென்றால்
அது புலிபோல் நம் மீது பாய்ந்துவிடும் ! அந்த நிலையில் தான் நான் தி .மு
.க .வில் இருக்கிறேன் ! என்னால் இனியும் பொறுக்கமுடியாது "! வைகோவின் இந்த
எரிமலை வார்த்தைகளை கேட்ட நாங்கள் ஆடிப்போய்விட்டோம் ! சற்று நேரத்தில்
புன்னகை ததும்ப வெளியே வந்து என் கைகளை பற்றி என்னை வரவேற்றார் வைகோ !
....சந்திப்பு தொடரும் ....!-தாகம் செங்குட்டுவன்
- Damodaranprakash Prakash, Krishna Kumar, நந்தா நண்பேன்டா மற்றும் வேறு 24 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
- வளவன் வசந்தா சித்தார்த்தா · 57 mutual friendsஅருமை. பழைய வராலாற்றுப்பதிவாக அமையும். தொடர்ந்து எழுதுங்கள் தோழர்!!!
- மா.ச.மதி வாணன் · 15 mutual friendsஎத்தனை நாளைக்கு நான் இந்த கொடுமையை அனுபவிப்பது ....ஒரு பூனையை ஒரு அறையில் பூட்டி விட்டு ஜன்னல்களையும் கதவுகளையும் மூடிவிட்டு அதை பிடிக்க சென்றால் அது புலிபோல் நம் மீது பாய்ந்துவிடும் ! அந்த நிலையில் தான் நான் # நாஞ்சில் சம்பத் சொல்வது போல் விழுகிறது
- Thaagam Senguttuvan தமிழர்களுக்கு பிறந்தவனுக்கு தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு ! கலைஞர் அதை அறிவித்ததால் பலர் எதிர்கின்றனர் . தமிழ் இனம் தோன்றிய முதலே தை தான் தமிழ் புத்தாண்டு என்பது அனைவரும் அறிந்ததே . தை மாதம் அறுவடை மாதம் விவசாயி மகிழ்ச்சியாக இருக்கும் மாதம் .ஆட்சியில் உள்ளோர் எதை வேண்டுமானாலும் மாற்றட்டும் ....உண்மையை மாற்ற முடியாது ஆரியத் தமிழா !!






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக