ஞாயிறு, 18 மே, 2014

ஒரு நாள் கனவு!
__________________
கருப்பில் பிறந்தாய்
சிவப்பில் மலர்ந்தாய்

சூரியனாய் விரிந்தாய்
சூழ்ச்சியில் வீழ்ந்தாய்

நெருக்கடியில் மிளிர்ந்தாய்
ஒளித்திரையால் மறைந்தாய்

மஞ்சளில் மயங்கினாய்
நெஞ்சினுள் உறுத்தினாய்

ஈழத்தால் எழுந்தாய்
இத்தாலியால் சிதைந்தாய்

மீண்டு (ம்) கருப்பானாய்
நாங்கள் நெருப்பானோம்

நிரந்தரம் என்றாய்
நிலவினில் பறந்தோம்

மறுதினமே மஞ்சள் குளித்தாய்
அணு அணுவாய் வெட்டி சிதைத்தாய்

கருப்பை துறந்தாய்
வெறுப்பை சுமந்தாய்

கருப்பு எமக்கு பொது உடைமை
கலைஞரே ...உமக்கு தனி உடைமை

மீண்டும் எம்மை ஏமாற்றாதே ....
மிச்ச சுயமரியாதையை ...சிதைக்காதே !
-கழகக்கண்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக