வியாழன், 19 ஜூன், 2014

மதிப்பெண்ணுக்காக
உன்னை
மனப்பாடம்
செய்தோமே
தவிர

மனத்தில்
பாடம்
செய்ய
மறந்து
விட்டோம்

மதம்
சாதி
மொழி
எதையும்
சொல்லாமல்

மனிதத்தை
மட்டுமே
சொன்னாய்
ஈரடி
எழு சீரில்

உன்
அறம்
பொருள்
இன்பம்
படித்தவன்

அதுபடி
நடந்தால்
தோற்பதற்கே
வாய்ப்பு
இல்லை

மலரினும்
மெல்லியது
காமம்
எழுத்தாணி
கவிதை

முகநூல்
எங்கும்
பசுமரத்து
ஆணி
போல்

அறம்
முற்றிலும்
அழிந்து
விட்ட
நிலையில்

பொருள்
பத்திரமாக
தலைவர்களின்
சுவிஸ்
வங்கியில்

சொல்லாத
மதமும்
சாதியும்
ஆட்சிக்
கட்டிலில் !

படம்-பாலபாரதி எம். எல். ஏ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக