சனி, 12 ஜூலை, 2014

வலைகளில்
சிக்கும்
வண்ண
மீன்கள் !
பறக்க
பறக்க
விடை
பெறுகிறோம் ....


நெருக்கம்
கேட்ட
பல
கேள்விகளுக்கு !

நியாயமான
இடைவெளி ....

ஞானங்களை
போதிக்கிறது !
பறந்ததில்
பிடித்ததை
கூண்டில்
அடைக்கிறோம்

மலர்ந்ததில்
பிடித்ததை
வீட்டில்
வளர்கிறோம்

கவர்ந்ததை
கடிவாளமிட்டே
நமதாக்கிக்
கொள்கிறோம் ....

பிறகெப்படி
பறக்கும்
மணக்கும்
கவரும் ?

மீண்டும்
அகப்படாத
நிலவை
ரசிக்கிறோம் !

வியாழன், 19 ஜூன், 2014

களத்துமேட்டில்
கடலைக்காய்
காயவைக்கும்
போது

உன்
மடியில்
படுத்து
உறங்குவேன்

கண்ணய்யனை
எனக்கு
சுற்றிப்போடச்
சொல்வாய்

காலால் பிறந்த
பார்வதியை
குடலேற்றம்
எடுக்கச்சொல்வாய்

விளையாட்டில்
கண்ணடிப்பட்டால்
முலைப்பால்
பீய்ச்சச் சொல்வாய்

காராமணி
பறித்தவர்களுக்கு
எட்டணா
கொடுக்கச்சொல்வாய்

சகலகலாவல்லவன்
பார்க்க
நண்பர்களுக்கு சேர்ந்து
பத்து ரூபாய் தருவாய்

உன்
முந்தானை
எனக்கு ஏ.டி.எம்
முத்தம் பாஸ்வார்டு

பாரதிராஜா படத்து
காந்திமதி போல்
நீ ரவிக்கை அணியாத
பெரியம்மா

எத்தனைக்குடும்பப்
பஞ்சாயத்துகளை
திண்ணையிலேயே
தீர்த்து வைப்பாய்

இன்னைக்கு கூட
தவறி
விழப்
பார்த்தேன்

எங்கப் போன
என்
ரங்கநாயகி
ஆயா ?

சுத்திப்போட
ஏங்குறான்
பெரிய
பேரன் !

மதிப்பெண்ணுக்காக
உன்னை
மனப்பாடம்
செய்தோமே
தவிர

மனத்தில்
பாடம்
செய்ய
மறந்து
விட்டோம்

மதம்
சாதி
மொழி
எதையும்
சொல்லாமல்

மனிதத்தை
மட்டுமே
சொன்னாய்
ஈரடி
எழு சீரில்

உன்
அறம்
பொருள்
இன்பம்
படித்தவன்

அதுபடி
நடந்தால்
தோற்பதற்கே
வாய்ப்பு
இல்லை

மலரினும்
மெல்லியது
காமம்
எழுத்தாணி
கவிதை

முகநூல்
எங்கும்
பசுமரத்து
ஆணி
போல்

அறம்
முற்றிலும்
அழிந்து
விட்ட
நிலையில்

பொருள்
பத்திரமாக
தலைவர்களின்
சுவிஸ்
வங்கியில்

சொல்லாத
மதமும்
சாதியும்
ஆட்சிக்
கட்டிலில் !

படம்-பாலபாரதி எம். எல். ஏ

கங்கை
மீதுப்
பறந்த
கழுகுகள்

நாடு
முழுதும்
பறக்கத்
தொடங்கியுள்ளன

அழுகியப்
பிணங்களை
உண்ட
அவற்றுக்கு

சிறுமிகளின்
பிணங்கள்
சிறப்பு
விருந்து

வன்புணர்வு
கழுகுகள்
உண்டது
போக

மிச்சத்திற்கு
வருகிறது
கங்கையிலிருந்து
காவிக்கழுகு !